நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதிக்கு இந்தியா, தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் முன்னேறியுள்ளன. மும்பையில் இன்று நடந்து வரும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன.
2019ல் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. மேலும், உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றுகளில் இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்தியதே கிடையாது. எனவே, நடப்பு உலகக்கோப்பை தொடரில் 9 ஆட்டங்களில் 9ல் வெற்றி பெற்ற இந்திய அணி, இந்த முறையில் நியூசிலாந்து அணியை தோற்கடிக்கும் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த நிலையில், இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இது இந்திய அணியின் ராசியாகவே பார்க்கப்படுகிறது.
ஏனெனில், இதுவரை நடந்த உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டங்களில் இந்திய அணி முதலில் பேட் செய்த போட்டிகளில் எல்லாம் வெற்றி பெற்றுள்ளது. அதாவது, 2011ல் நடந்த அரையிறுதியில் இந்திய அணி முதலில் பேட் செய்தது. அந்த ஆண்டு இந்திய அணி கோப்பையை வென்றது. 2015 மற்றும் 2019ல் 2வதாக பேட் செய்த இந்திய அணி தோல்வியை தழுவியது.
இந்த சூழலில் இந்த முறை முதலில் இந்திய அணி பேட்டிங் செய்வதால், கட்டாயம் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.