நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது.
நடப்பு 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டன. 4வது இடத்திற்கு நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது.
இதில் கடந்த சில போட்டிகளின் முடிவுகளால் நியூசிலாந்து அணிக்கே 99 சதவீத வாய்ப்புகள் இருந்தது. ஏதேனும் அதிர்ஷ்டம் நிகழ்ந்தால் பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு அரையிறுதி வாய்ப்பு என்றிருந்தது.
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்ததால் அந்த அணி உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
அதேவேளையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு சற்று சவால் நிறைந்ததாகும். அதாவது, 300 ரன்களை இலக்காக நிர்ணயித்தால் இங்கிலாந்தை 13 ரன்களுக்கும், 400 ரன்களை இலக்காக நிர்ணயித்தால் 122 ரன்களுக்குள்ளும் சுருட்ட வேண்டும். மாறாக இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தால் அந்த அணி நிர்ணயிக்கும் இலக்கை 3 ஓவர்களுக்குள் அடிக்க வேண்டும் என்ற சவால் இருந்தது.
இந்த நிழலில், பாகிஸ்தான் டாஸ் ஜெயித்து பேட் செய்தால் மட்டுமே, அரையிறுதியை ஒரு சதவீதமாவது நினைத்து பார்க்க முடியும் என்றிருந்தது. அப்படியிருக்கையில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனால், ஒருவேளை இங்கிலாந்து அணி 100 ரன்னுக்கு ஆட்டமிழந்தால் அதனை 2.5 ஓவர்களிலும், 200 ரன்னுக்கு ஆட்டமிழந்தால் அதனை 4.3 ஓவர்களுக்குள்ளும், 300 ரன்னுக்கு ஆட்டமிழந்தால் அதனை 6.1 ஓவர்களில் சேஸ் செய்ய வேண்டும். ஆனால், இது எதுவும் முடியாத காரியம்.
எனவே, பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை முற்றிலுமாக இழந்து விட்டது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.