Movie Review

எதிர்பார்ப்பை எகிற வைத்ததா மோகன்லாலின் ‘எம்புரான்’…படத்தின் விமர்சனம் இதோ.!

மோகன்லால் நடிப்பில்,பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான “எம்புரான்” பான் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் ஆகியுள்ளது.2019ல் வெளியான “லூசிஃபர்” படத்தின் தொடர்ச்சியாக உருவான இப்படம், மலையாள சினிமாவின் பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

இதையும் படியுங்க: ஐபிஎல் கிரிக்கெட்டே கிடையாது..தடை பண்ணுங்க..குஜராத் அணி பவுலர் ஆவேசம்.!

இன்று காலை 6 மணிக்கு முதல் காட்சி திரையரங்குகளில் தொடங்கிய நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்த படி,மிக பிரம்மாண்டமான திரைப்படமாக எம்புரான் அமைந்துள்ளது.

கதைக்கரு

லூசிஃபரில் தொடங்கிய அரசியல் மற்றும் சக்திக்கான போராட்டம் எம்புரானிலும் தொடர்கிறது.பிமல் நாயர் இல்லாத நிலையில்,ஜெட்டின் ராம் தாஸ் தனது முதல்வர் பதவியை ஐந்து ஆண்டுகளாக நிரப்பி வருகிறார்.ஆனால், தனது தந்தையின் பாதையில் இருந்து மாற விரும்பும் ஜெட்டின்,அரசியலில் புதிய மாற்றங்களை செய்ய நினைக்கிறான்.இதற்கு அவனது சகோதரி பிரியதர்ஷினி கூட ஒத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில்,அனைவரும் ஸ்டீபன் நெடும்பள்ளி (மோகன்லால்) திரும்ப வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.ஆனால் அவர் தற்போது “அப்ராம் குரேஷி” என்ற நிழல் உலகத்தின் பேரதிபராக,உலக அளவில் பல அபாயகரமான செயல்களில் ஈடுபடுகிறார். அவரது உண்மையான நோக்கம் என்ன?அரசியலில் அவர் திரும்ப வருவாரா? என்பதையே எம்புரான் விரிவாக வெளிப்படுத்துகிறது.

முரளி கோபி எழுதிய திரைக்கதைக்கு,பிருத்விராஜ் தனது அசாத்திய இயக்கத்தால் புதிய உயிர் கொடுத்துள்ளார்.மோகன்லாலின் முதல் காட்சியே ரசிகர்களை வெகுவாகக் கவரும் வகையில் அமைந்துள்ளது.

முதல் பாதி கதாபாத்திரங்களை நுட்பமாக விளக்குகிறது,அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது.இரண்டாம் பாதி ஆக்‌ஷன்,அரசியல் மற்றும் சக்திக்கான போராட்டத்தை ஆழமாக கொண்டு செல்கிறது.

சிறப்பம்சங்கள்

மோகன்லாலின் தனித்துவமான ஸ்டைல்,அணுகுமுறை,அசால்ட் நடிப்பு ரசிகர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.மஞ்சு வாரியர் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார்.படத்தில் வரக்கூடிய மாஸ் காட்சிகள் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது

சுஜித் வாசுதேவனின் ஒளிப்பதிவு மற்றும் தீபக் தேவின் இசை படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.மொத்தத்தில் எம்புரான் ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Mariselvan

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

2 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

2 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

2 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

2 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

3 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

3 hours ago

This website uses cookies.