Movie Review

அனல் பறக்கும் புஷ்பா 2..படத்தின் திரைவிமர்சனம் இதோ..!

புஷ்பா படத்தின் முதல் பாகம் வெளியாகி அனைவரையும் கவர்ந்து 1000 கோடி வசூலை அள்ளியது மட்டுமல்லாமல்,அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகரனுக்கான தேசிய விருதையும் வாங்கி தந்தது.

இதற்கிடையே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 3 வருடம் கழித்து புஷ்பா 2 தி ரூல்,இன்று பான் இந்தியா அளவில் வெளியாகி ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றுவருகிறது.

ஒரு சாதாரண சந்தன மர கடத்தலாக இருந்த புஷ்பா எப்பிடி ஒரு சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆளுகிறார் என்பதை தான் புஷ்பா 2 வின் கதையாக உருவெடுத்துள்ளது. அல்லு அர்ஜுன் சிவப்பு சந்தன சிண்டிகேட் சாம்ராஜ்யத்தின் முக்கிய தலைவராக மாறி, தனக்கென ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார்.


எஸ்.பி. பன்வர் சிங் ஷெகாவத் நடித்திருக்கும் ஃபஹத் பாசில் ஒவ்வொரு முறையும் புஷ்பாவின் சிவப்பு சந்தன மரத்தை சட்டவிரோதமாக கொண்டு செல்வதை தடுக்க முயற்சிக்கிறார்.


ஸ்ரீவள்ளியாக நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா புஷ்பா,முதல்வருடன் ஒரு புகைப்படம் எடுப்பதைப் பார்க்க ஆசைப்படுகிறார்,ஆனால் முதல்வர் புஷ்பா ராஜை ஒரு கடத்தல்காரர் என்று கூறி அவருடன் புகைப்படம் எடுக்க மறுக்கிறார்.

முதல்வரை நீக்கிவிட்டு தன்னுடைய சித்தப்பாவை அந்த பதவியில் அமர வைக்க புஷ்பா முடிவு செய்கிறார். அதே நேரத்தில் வெளிநாடு செல்லும் சிவப்பு சந்தன மர கட்டைகளை, பன்வர் சிங் ஷெகாவத் பிடிக்க முயற்சிக்கிறார்.அது நடந்தால், புஷ்பாவின் சாம்ராஜ்யத்திற்கு பெரிய ஆபத்து.

இதையும் படியுங்க: புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

இந்த இரு பிரச்னைகளை எப்படி சமாளித்தார் புஷ்பராஜ்? அதன் பிறகு என்ன நடந்தது?
புஷ்பாவின் சாம்ராஜ்ஜியத்தை தடுக்க பன்வர் சிங் ஷெகாவத் என்னவெல்லாம் செய்தார்? புஷ்பா அவரை எப்படி வீழ்த்தினார்? புஷ்பாவின் கனவு எப்படி நனவாகியது? தனது மூத்த சகோதரரின் மகளை காப்பாற்ற மத்திய அமைச்சர் பிரதாப் ரெட்டியுடன் புஷ்பா ஏன் சண்டையிட்டார்? இதுதான் புஷ்பா 2 படத்தின் கதை.


வெறும் மாஸ் காட்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் , இரண்டாம் பாகத்தில் குடும்ப உணர்வுகளுக்கு இடம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுகுமார்.

புஷ்பா மற்றும் பன்வர் சிங் ஷெகாவத் வரும் காட்சிகள் அதிரடியாக மட்டுமல்லாமல், நகைச்சுவை கலந்து ரசிக்கும்படியாக உள்ளது.பன்வர் சிங்கின் உயரத்தை புஷ்பா பின்னுக்குத் தள்ளும் காட்சிகள் த்ரில்லிங்கானவை.

படத்தில் உணர்வுகள் மற்றும் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லை. பாடல்கள் வேண்டுமென்றே கதையில் புகுத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது.மொத்தத்தில் பக்கா வணீகரீதியாக புஷ்பா 2 தி ரூல் அமைந்துள்ளது.

Mariselvan

Recent Posts

என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!

மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…

5 hours ago

அட செம.!கோவையில் சர்வேதச கிரிக்கெட் மைதானம்…ரசிகர்கள் குஷி.!

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…

6 hours ago

ஜெயிலுக்கு போக ரெடியா இருங்க…ஆபாச வீடியோ லீக்..நடிகை அட்டாக்.!

வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…

6 hours ago

3 நாளில் விவாகரத்து.. 19 வயது மகன் செய்த காரியம்.. ஆடு மேய்த்தபோது திடுக்கிடும் சம்பவம்!

விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…

7 hours ago

தீராத நோய்…வெளியே சொல்ல பயம்..பிரபல நடிகை வருத்தம்.!

காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…

7 hours ago

தண்ணீர் யாருக்கு காட்ட வேண்டும்? விஜய்க்கு அண்ணாமலை பதிலடி!

காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…

8 hours ago

This website uses cookies.