Movie Review

அனல் பறக்கும் புஷ்பா 2..படத்தின் திரைவிமர்சனம் இதோ..!

புஷ்பா படத்தின் முதல் பாகம் வெளியாகி அனைவரையும் கவர்ந்து 1000 கோடி வசூலை அள்ளியது மட்டுமல்லாமல்,அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகரனுக்கான தேசிய விருதையும் வாங்கி தந்தது.

இதற்கிடையே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 3 வருடம் கழித்து புஷ்பா 2 தி ரூல்,இன்று பான் இந்தியா அளவில் வெளியாகி ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றுவருகிறது.

ஒரு சாதாரண சந்தன மர கடத்தலாக இருந்த புஷ்பா எப்பிடி ஒரு சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆளுகிறார் என்பதை தான் புஷ்பா 2 வின் கதையாக உருவெடுத்துள்ளது. அல்லு அர்ஜுன் சிவப்பு சந்தன சிண்டிகேட் சாம்ராஜ்யத்தின் முக்கிய தலைவராக மாறி, தனக்கென ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார்.


எஸ்.பி. பன்வர் சிங் ஷெகாவத் நடித்திருக்கும் ஃபஹத் பாசில் ஒவ்வொரு முறையும் புஷ்பாவின் சிவப்பு சந்தன மரத்தை சட்டவிரோதமாக கொண்டு செல்வதை தடுக்க முயற்சிக்கிறார்.


ஸ்ரீவள்ளியாக நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா புஷ்பா,முதல்வருடன் ஒரு புகைப்படம் எடுப்பதைப் பார்க்க ஆசைப்படுகிறார்,ஆனால் முதல்வர் புஷ்பா ராஜை ஒரு கடத்தல்காரர் என்று கூறி அவருடன் புகைப்படம் எடுக்க மறுக்கிறார்.

முதல்வரை நீக்கிவிட்டு தன்னுடைய சித்தப்பாவை அந்த பதவியில் அமர வைக்க புஷ்பா முடிவு செய்கிறார். அதே நேரத்தில் வெளிநாடு செல்லும் சிவப்பு சந்தன மர கட்டைகளை, பன்வர் சிங் ஷெகாவத் பிடிக்க முயற்சிக்கிறார்.அது நடந்தால், புஷ்பாவின் சாம்ராஜ்யத்திற்கு பெரிய ஆபத்து.

இதையும் படியுங்க: புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

இந்த இரு பிரச்னைகளை எப்படி சமாளித்தார் புஷ்பராஜ்? அதன் பிறகு என்ன நடந்தது?
புஷ்பாவின் சாம்ராஜ்ஜியத்தை தடுக்க பன்வர் சிங் ஷெகாவத் என்னவெல்லாம் செய்தார்? புஷ்பா அவரை எப்படி வீழ்த்தினார்? புஷ்பாவின் கனவு எப்படி நனவாகியது? தனது மூத்த சகோதரரின் மகளை காப்பாற்ற மத்திய அமைச்சர் பிரதாப் ரெட்டியுடன் புஷ்பா ஏன் சண்டையிட்டார்? இதுதான் புஷ்பா 2 படத்தின் கதை.


வெறும் மாஸ் காட்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் , இரண்டாம் பாகத்தில் குடும்ப உணர்வுகளுக்கு இடம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுகுமார்.

புஷ்பா மற்றும் பன்வர் சிங் ஷெகாவத் வரும் காட்சிகள் அதிரடியாக மட்டுமல்லாமல், நகைச்சுவை கலந்து ரசிக்கும்படியாக உள்ளது.பன்வர் சிங்கின் உயரத்தை புஷ்பா பின்னுக்குத் தள்ளும் காட்சிகள் த்ரில்லிங்கானவை.

படத்தில் உணர்வுகள் மற்றும் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லை. பாடல்கள் வேண்டுமென்றே கதையில் புகுத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது.மொத்தத்தில் பக்கா வணீகரீதியாக புஷ்பா 2 தி ரூல் அமைந்துள்ளது.

Mariselvan

Recent Posts

சூர்யாவை பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- பொதுமேடையில் விஜய்யை வம்பிழுத்த பிரபலம்!

கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

19 hours ago

ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…

கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…

21 hours ago

அதிகமான பாஜக எம்எல்ஏக்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம் : வானதி சீனிவாசன் உறுதி!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…

21 hours ago

நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…

22 hours ago

விஜய் ஆபாச பட நடிகர்.. அவர் தந்தை ஆபாச பட இயக்குநர்.. குடும்பமே : சர்ச்சையை கிளப்பிய திமுக பேச்சாளர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…

22 hours ago

போலீஸ் ரைடுக்கு பயந்து தப்பியோடிய அஜித் பட நடிகரை வளைத்து பிடித்த போலீஸார்! விசாரணை கெடுபிடி…

ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…

22 hours ago

This website uses cookies.