2013 ஆம் ஆண்டு இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியாகி வெற்றியை கண்ட படம் சூது கவ்வும்,அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகமாக தற்போது சூது கவ்வும் 2 வந்துள்ளது.
இந்த புதிய படத்தை இயக்குனர் எஸ்.ஜே. அர்ஜுன் இயக்கியுள்ளார். படத்தில் மிர்ச்சி சிவா, கருணாகரன், எம். எஸ். பாஸ்கர், ராதா ரவி போன்ற முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முதல் பாகத்தில் நடிகர் கருணாகரன் அரசியலில் என்ட்ரி கொடுத்து பின்பு நிதி அமைச்சராக மக்களால் 3 முறை தேர்வு செய்யப்படுகிறார். இவர் ஊழல் செய்து ஒரு கட்டத்தில் மாட்டிக்கொள்கிறார்.
இதையும் படியுங்க: சினிமா பிரபலங்களுக்கு என்ன ஆச்சு…விவாகரத்து வாங்கிய பிரபல நடிகை…!
இந்நிலையில் கடத்தல் தொழில் செய்து வரும் மிர்ச்சி சிவா நிதி அமைச்சர் கருணாகரனை கடத்திவிடுகிறார்.இதன் பின்னர் என்ன நடக்கிறது? கருணாகரன் தன் பிரச்சனைகளிலிருந்து விடுபடுகிறாரா? இவர்களுக்கிடையில் வெற்றியாளராக யார் இருக்கிறார்? என்பது படத்தின் மீதிக் கதை.
அரசியல் குறித்த வசனங்கள்,மிர்ச்சி சிவா செய்யும் நகைச்சுவை படத்தில் சிறப்பாக அமைந்துள்ளது.நகைச்சுவையை தவிர்த்து படத்தில் சொல்லிக்கிடும் அளவிற்கு எதுவும் இல்லை என்றே சொல்லலாம்.
படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களும் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை.சூது கவ்வும் முதல் பாகத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் சூது கவ்வும் 2 ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253…
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
This website uses cookies.