விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஒட்டி விழுப்புரம் – திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லை பகுதியான கண்டாச்சிபுரம் அருகே உள்ள மழவந்தங்கள் கிராமத்தில் மாவட்ட எல்லை பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, திருக்கோவிலூரில் இருந்து திருவண்ணாமலை செல்வதற்காக கண்டாச்சிபுரம் வழியாக சென்ற வாகனத்தை நிறுத்தி, சோதனை சாவடியில் போலீசார் சோதனை செய்துள்ளனர்.
அப்போது வாகனத்தில் இருந்த மதனகோபால் எனும் மருத்துவர் வாகனத்தில் ஒரு கோடி ரூபாய் பணம் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். பின்னர், நடத்திய விசாரணையில் கோயம்புத்தூரில் தனது தகப்பனார் நிலத்தை விற்று தன்னிடம் ஒரு கோடி ரூபாய் பணத்தை கொடுத்ததாகவும், அதனை சென்னை எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் விழுப்புரம் மாவட்ட கருவூலத்தில் பணம் ஒப்படைக்க எடுத்துச் செல்ல உள்ளதாக தேர்தல் பறக்கும் படையினர் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் நேரத்தில் சொகுசு காரில் ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.