தமிழகம்

போதையில் மயங்கிய +1 மாணவி… காட்டுக்குள் அழைத்து சென்ற கோட்டர் கோவிந்தன்.. அதிர வைத்த பயங்கரம்!

மதுபோதையில் சாலையோரம் கிடந்த மாணவியை மீட்டு விசாரித்ததில் பாலியல் பலாத்காரத்துக்கு முயற்சித்தது தெரியவந்துள்ளது.

சேலம் மாநகரம் அழகாபுரம் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 11ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர்,மது போதையால் மயங்கிய நிலையில் சாலையோரம் கிடந்துள்ளார்.

இதனை அவ்வழியாக நடந்து சென்று பொதுமக்கள் பார்த்து அந்த பள்ளி மாணவியை உடனடியாக மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் உதவியுடன் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பள்ளி மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் , மாணவி மதுபானம் கலந்த குளிர்பானத்தை அதிக அளவில் அருந்தியுள்ளார் என்று காவல்துறையினரிடம் கூறினார் .

இது குறித்து அழகாபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அழகாபுரம் பகுதியில் மாணவி மயங்கி விழுந்து கிடந்த இடத்தின் அருகே உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு மேற்கொண்டனர்.

அப்பொழுது வாலிபர் ஒருவர் மாணவியை இருசக்கர வாகனத்தில் அமர வைத்து, அழைத்து வந்து சாலையோரம் இறக்கி, படுக்க வைத்து சென்றது சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்தது.

இதையும் படியுங்க: சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து : கனநேரத்தில் உயிர்தப்பிய நபர்கள்!

பின்னர் அதில் இருந்த வாலிபரின் அடையாளத்தை வைத்து , விசாரணை நடத்தி சேலம் அழகாபுரம் அருகே ராமன்குட்டை பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி(36) என்பது தெரிய வந்து , அவரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் கோவிந்தசாமி , அழகாபுரம் அருகே பழைய இரும்பு கடை வைத்துள்ளதாகவும் , தனது கடைக்கு அருகே உள்ள பள்ளியில் படித்த மாணவி ஒருவர், அவ்வப்போது அருகே உள்ள இரும்பு கடைக்கு வந்து வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட , மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு கோவிந்தசாமி பள்ளி மாணவியை அழைத்து சென்றுள்ளார். அப்பொழுது கோவிந்தசாமி மாணவிக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து குடிக்க வைத்துள்ளார்.

இதில் மாணவிக்கு போதை தலைக்கு ஏறியது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கோவிந்தசாமி மாணவியிடம் பாலியல் பலாதரத்தில் ஈடுபட முயன்ற போது, திடீரென மாணவிக்கு வலிப்பு வர பயந்து போன கோவிந்தசாமி மயங்கி நிலையில் இருந்த பள்ளி மாணவியை , தனது இருசக்கர வாகனத்தில் உட்கார வைத்து அழகாபுரம் பகுதியில் இறக்கி விட்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் அழகாபுரம் போலீசார் இரும்பு கடை வியாபாரி கோவிந்தசாமி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, சேலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

பள்ளி மாணவிக்கு குளிர்பானத்தில் மதுபான கலந்து குடிக்க வைத்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

12 hours ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

13 hours ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

13 hours ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

14 hours ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

14 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

14 hours ago

This website uses cookies.