Categories: தமிழகம்

தஞ்சையில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 1 கிலோ வெள்ளி நகையை களவாடிய மர்மநபர்கள்: போலீசார் தீவிர விசாரணை…!!

தஞ்சையில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 1 கிலோ வெள்ளி நகை திருடு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சை மாதாக்கோட்டை ரோடு காவேரி நகரை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மனைவி சத்தியவதி (68). சம்பவத்தன்று இவர்கள் சென்னையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பீரோவை திறந்து 1 கிலோ வெள்ளி, அரை பவுன் தங்க நகையை திருடி தப்பி ஓடிவிட்டனர். கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்தியவதிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் தமிழ்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். இது பற்றிய புகாரின் பேரில் விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

இதேப்போல் தஞ்சை மாதாக்கோட்டை ரோடு குழந்தையேசு கோவில் நகரில் உள்ள ஒரு வீட்டில் ஒரு கதவை உடைத்து மர்மநபர்கள் திருட முயன்றனர். அதற்குள் வீட்டில் உள்ளவர்கள் எழுந்து சத்தம் போட்டதால் அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!

60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…

4 hours ago

கேமியோ ரோலில் பிரபல தெலுங்கு நடிகர்..”ஜெயிலர் 2″ சம்பவம் லோடிங்.!

நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…

5 hours ago

“WHAT BRO”நான் குல்லா போடுற ஆள் இல்லை..மேடையில் விஜயை தாக்கிய பிரபலம்.!

வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…

6 hours ago

மருமகள், பேத்தியையும் விட்டுவைக்கவில்லை.. மாமியாருடன் சேர்ந்து செய்த பகீர் காரியம்!

கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…

6 hours ago

சர்ப்ரைஸ்.! ‘குட் பேட் அக்லி’ பட ரிலீஸில் ட்விஸ்ட்…தமிழில் இதுவே முதல்முறை.!

தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…

7 hours ago

எங்களுக்கு எந்த நிலத்தகராறும் இல்லை.. பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த செளந்தர்யா கணவர்!

சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…

7 hours ago

This website uses cookies.