மதுரை ; மதுரை வாடிப்பட்டி அருகே பெற்ற ஒரு மாத குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவமனைக்கு தூக்கி சென்று நாடகமாடிய கொடூர தாய் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டிஅருகே சல்லக்குளத்தை சேர்ந்தவர் சிவராஜ்-ஜீவிதா தம்பதி. சிவராஜ் எலக்ட்ரீசியனாகவும், ஜீவிதா தனியார் மருத்துவமனையில் நர்சாகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில்,
குழந்தை இல்லாமல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜீவிதா கடந்த ஆண்டு கர்ப்பம் தரித்த நிலையில், அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அடிக்கடி அழுவதாலும், உடல் முழுவதும் சரும நோய் ஏற்பட்டு தவித்து வந்ததால், விரக்தியடைந்த ஜீவிதா குழந்தையை பிளேடால் கழுத்தையறுத்து கொலை செய்துவிட்டு, எதுவும் தெரியாதது போல்
தொட்டில் கழுத்தை இறுக்கி ரத்தம் வந்ததாக வீட்டில் நாடகமாடியுள்ளார்.
இதையடுத்து, வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது வழியில் குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது. குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்ததை உறுதி செய்து, சந்தேகமடைந்து வாடிப்பட்டி போலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து சென்ற போலீசார் தாய் ஜீவிதாவிடம் அதிரடியாக விசாரணை நடத்தியதில், குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். ஜீவிதாவை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்ற குழந்தையை தாயே கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.