Categories: தமிழகம்

கொடைக்கானலில் உள்ள ஓட்டலில் உணவு சாப்பிட்ட கேரள சுற்றுலா பயணிகள் 10 பேருக்கு வாந்தி : உணவகத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்!!

கொடைக்கானல் : தனியார் உணவு விடுதியில் உணவு அருந்திய கேரளா சுற்றுலா பயணிகள் 10 நபர்களுக்கு வயிற்று போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டதை தொடர்ந்து,தனியார் உணவு விடுதி தற்காலிகமாக பூட்டப்பட்டு அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரிச்சாலை அருகே தனியார் உணவு விடுதி இயங்கி வருகிறது. இந்த உணவு விடுதியில் நேற்று இரவு 10க்கும் மேற்பட்ட கேரளா சுற்றுலா பயணிகள் உணவு அருந்தி சென்றுள்ளனர்.

அதனையடுத்து நள்ளிரவில் உணவு அருந்தி சென்ற 10 சுற்றுலா பயணிகளுக்கும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி எடுத்ததை தொடர்ந்து கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

சிகிச்சை அளித்த மருத்துவர்கள் காலாவதியான மீன் குழம்பு சாப்பிட்டதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் ஏரிச்சாலை அருகே இயங்கிய தனியார் உணவு விடுதியில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சோதனை செய்யும் போது மதிய உணவுக்கு தயராக இருந்த காலாவதியான இறைச்சிகள் கண்டறியப்பட்டது.

அதனை தொடர்ந்து சுமார் 10கிலோ காலாவதியான கோழி,மீன் மற்றும் வண்ணம் ஏற்றப்பட்ட இறைச்சி மற்றும் நீண்ட நாட்களான பருப்புகள் வகைகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

இதனையடுத்து உணவு சமைக்கும் அறை சுகாதாரமற்ற நிலையில் இருந்ததை தொடர்ந்து எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டு தற்காலிகமாக உணவு விடுதி பூட்டப்பது. மேலும் 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் சமையல் செய்யும் உணவு இறை புதுப்பித்த பிறகும், உணவு விடுதியில் பணியாற்றும் பணியாளர்களுக்கு உடல் தகுதி மற்றும் டைபாய்டு ஊசி செலுத்தி கொண்ட சான்றிதழ் சரிபார்த்த பிறகும் உணவு விடுதி திறக்கப்படும் என தனியார் உணவு விடுதி உரிமையாளருக்கு உணவு பாதுகாப்பு துறை அலுவலர் எச்சரித்து சென்றார்.

அதனை தொடர்ந்து கே.ஆர்.ஆர் கலையரங்கம் பகுதியில் தனியார் உணவு விடுதிகள், இறைச்சி மற்றும் தேனீர் கடைகளில் சோதனை செய்ததில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கண்டறியப்பட்டு 2000ரூபாய் அபராதம் தொகை விதிக்கப்பட்டது.

மேலும் கொடைக்கானலில் காலாவதியான உணவு பொருட்களை சுற்றுலா பயணிகளுக்கு வினியோக‌ம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அலுவலர் எச்சரித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

3 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

5 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

5 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

6 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

6 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

7 hours ago

This website uses cookies.