Categories: தமிழகம்

திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவத்தில் கோவையில் ஒரே நாளில் 10 பேர் கைது – ரூ.40 லட்சம் மதிப்பிலான 114 சவரன் நகைகள் பறிமுதல்..!

கோவை: திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 10-பேர் கைது செய்யப்பட்டு, ஒரே நாளில் திருடு போன 114 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் வழிப்பறி மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்யும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கைது செய்தனர்.

இதில் சிறப்பாக செயலாற்றிய காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுகளை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்பி பத்ரிநாராயணன், சிறுமுகை காவல் நிலைய சரகத்தில் கடந்த வாரம் இருசக்கர வாகனத்தில் பணத்துடன் வந்த டாஸ்மாக் சூப்பர்வைசர் விஜயானந்த் என்பவரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்து வழிப்பறி செய்ய முயற்சி செய்ததில் சிவகங்கையைச் சேர்ந்த ஆகாஷ், லோகநாதன், மனோஜ், பட்டுக்கோட்டை சேர்ந்த ராஜா என்ற ரவிக்கண்ணன் மற்றும் சதீஷ் ஆகியோர்கள் கைது செய்துள்ளதாகவும், இதுபோல் சிறுமுகை மற்றும் அன்னூர் பகுதிகளில் 6 வழிப்பறி மற்றும் வழிப்பறி முயற்சி வழக்குகளில் ஈடுபட்டதை கண்டறிந்து அவர்களை தனிப்படையினர் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து சுமார் 14 ½ பவுன் தங்க நகைகளை மீட்கப்பட்டதாக தெரிவித்தார். அதேபோல் காரமடை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மூன்று வழக்குகளில் ஈடுபட்ட திருநெல்வேலியைச் சுரேஷ் (எ) சூட்டு சுரேஷ், தென்காசியைச் சேர்ந்த மருதராஜ் (எ) சப்ஜெயில் ராஜா,தூத்துக்குடியைச் சேர்ந்த செந்தில் மருதுபாண்டி (எ) மருது ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 72 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 இரு சக்கர வாகனத்தையும் மீட்டனர்.

அதேபோல் கோவில்பாளையம் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மூன்று வழக்குகளில் ஈடுபட்ட நீலகிரி மாவட்டத்தைச் சாலமன்மற்றும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 27 ½ பவுன் தங்க நகைகளை மீட்டனர்.

மொத்தமாக ஒரே நாளில் வழிப்பறி மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 10 நபர்களை கைது செய்துள்ளதாகவும் இவர்களிடமிருந்து மொத்தம் 114 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Poorni

Recent Posts

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

14 minutes ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

58 minutes ago

நான் இசைக்கடவுளா? ரசிகர்களுக்கு இளையராஜா இசைக் கட்டளை!

என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…

2 hours ago

கோலா, நகை விளம்பரம்.. விஜயை மறைமுகமாக சாடிய பிரேமலதா!

சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…

2 hours ago

வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…

3 hours ago

ராஷ்மிகாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்? மத்திய அரசுக்கு சமூக அமைப்பு பரபரப்பு கடிதம்!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்…

4 hours ago

This website uses cookies.