திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளவிய சுற்றுலாத்தலமாகும். கொடைக்கானலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
குறிப்பாக வார விடுமுறை நாட்களில் கொடைக்கானலில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிவார்கள்.
இந்நிலையில் வார விடுமுறையான இன்று பல்வேறு பகுதிகளில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வந்திருந்த நிலையில் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ள பைன்மரக்காடுகளில் உள்ள இயற்கை சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும் புகைப்படங்களை எடுக்கவும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
அதே போன்று இன்று அதிக அளவில் பயணிகள் பைன் மரக்காடுகளுக்கு வந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த வேன் ஒன்று ஓட்டுனரின் காட்டுப்பாட்டு இழந்து இறக்கத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை சில நொடிகளில் இடித்து தள்ளியது .
இதில் பைன் மரக்காடுகள் பகுதியில் இறங்கி நின்றிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்த நிலையில் மீதமுள்ள சுற்றுலா பயணிகள் நொடி பொழுதில் உயிர் தப்பினர்.
முக்கிய சுற்றுலா தலமாக உள்ள இந்த பகுதியில் சரியாக ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் அதே பகுதியில் விபத்து ஏற்பட்டு இருக்கிறது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .
கடந்த வருடம் இதே போன்று கடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சரியாக ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் அதே இடத்தில் விபத்து ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது காயமடைந்துள்ள சுற்றுலாப் பயணிகளை கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பலமுறை கோரிக்கை விடுத்தும் தற்போது வரை நெடுஞ்சாலைத் துறையினர் அந்த சாலையை சீர் செய்யவில்லை முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன் வைக்கிறார்கள் உள்ளூர் வாசிகள்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.