தமிழகம்

காலைக்கடன் கழிக்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்.. ஓசூரில் சோகம்!

ஓசூர் தேன்கனிக்கோட்டை அருகே யானைக்காக அமைக்கப்பட்ட மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அடுத்த தாதகரை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் திவ்ய ஸ்ரீ. 10 வயதான திவ்ய ஸ்ரீ, அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், இவர் இன்று காலை காலைக்கடனைக் கழிப்பதற்காக வீட்டுக்குப் பின்னால் உள்ள கழிவறைக்குச் சென்று உள்ளார். அப்போது, கழிவறை அருகே இருந்த மின்கம்பியை திவ்ய ஸ்ரீ தொட்டு உள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில், சம்பவ இடத்திலேயே திவ்ய ஸ்ரீ துடிதுடித்து உயிரிழந்தார்.

பின்னர், சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், சிறுமியின் நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அது மட்டுமல்லாமல், சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர், இது குறித்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தேன்கனிக்கோட்டை போலீசார், சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, போலீசார் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: CALLING BELL அடித்து நூதன செயின் பறிப்பு… பெண்களை அலற விடும் ஷாக் VIDEO!

இதில், சிறுமியின் தந்தை கிருஷ்ணன், காட்டு யானைகள் வராமல் இருப்பதற்காக மின்வேலி அமைத்ததாகவும், அதிலே மின் கசிவு ஏற்பட்டு அவரது மகள் உயிரிழந்ததும் தெரிய வந்து உள்ளது. மேலும், இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

காதல் திருமணத்திற்கு காத்திருந்த இளம்பெண் கொலை… கடைசியாக பேசிய காதலன் : காத்திருந்த டுவிஸ்ட்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…

40 minutes ago

விஜய் சேதுபதியை திட்டிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த சாந்தனு! அப்படி என்னதான் நடந்தது?

தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…

45 minutes ago

கலவரத்தை தூண்டும் எம்புரான், இது திட்டமிட்ட சதி- பொங்கி எழுந்த சீமான்

அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…

1 hour ago

3 மணி நேர உண்ணாவிரதத்தை மறந்து விடுவோமா? கச்சத்தீவு கபட நாடகம் நடத்தும் திமுக : அண்ணாமலை அட்டாக்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…

3 hours ago

ஆதரவில்லாம இருந்தேன், அந்த வலியை தாங்கிக்க முடியல- மனம் நொந்த விக்ரம் பட இயக்குனர்..

கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

3 hours ago

This website uses cookies.