குறிஞ்சிப்பாடியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 77 வயது ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 77 வயதுடைய கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகனும், கடலூர் மாவட்ட காவல்துறையிலேயே பணிபுரிந்து வருகிறார். இதில் கடந்த திங்கட்கிழமை இரவு கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டு அருகே உள்ள 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: ஜனாதிபதியை குறித்து கொச்சை பேச்சு.. பிரதமர் மோடி மீது பாஜக நடவடிக்கை எடுக்குமா..? கார்த்தி சிதம்பரம் கேள்வி..!!
இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். பின்னர், 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கிருஷ்ணமூர்த்தியை போஸ்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
பத்து வயது சிறுமிக்கு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.