Categories: தமிழகம்

100 யூனிட் மின்சாரம் ரத்தா? வெளியான தகவல் : தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்..!!

100 யூனிட் மின்சாரம் ரத்தா? வெளியான தகவல் : தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்..!!

தமிழகத்தில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. அதில், வீட்டு உபயோக மின் இணைப்புகளுக்கு முதல் 100 யூனிட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

கடந்த 2022ம் ஆண்டு இறுதியில், மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்குமாறு மின் வாரியம் உத்தரவிட்டது. ஒன்றிற்கு மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருப்பவர்களும்கூட, அனைத்து இணைப்புக்கும் ஒரே ஆதார் எண்ணை பதிவு செய்யலாம், அல்லது வாடகைக்கு விட்டிருந்தால், அவர்களின் ஆதார் எண்ணைக்கொண்டு வாடகைக்கு விட்டுள்ளதாக குறிப்பிட்டு பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

இதனால் 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் ரத்து செய்யப்படுமோ என அப்போதே மக்கள் மத்தியில் அச்சம் எழுந்தது. ஆனால், அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்படாது என உறுதியளித்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட மின் கணக்கீட்டில் தமிழகத்தில் பெரும்பாலானோருக்கு எப்போதும் செலுத்தும் தொகையை விட கூடுதலாக மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க: 6 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 61 வயது முதியவர்.. திருச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்!!

100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்பட்டு, முழு யூனிட்டுக்கும் கட்டணம் வசூலித்திருப்பதாக தகவல் வெளியானது. இதனை தமிழக மின் வாரியம் மறுத்துள்ளது.

இது தொடர்பாக மின்வாரியம் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம்: ஒரு வீட்டின் உரிமையாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் வைத்திருந்தால், அவருக்கு 100 யூனிட் மின்சாரம் மட்டுமே மானியமாக வழங்கப்படும். அதுவே வீட்டின் உரிமையாளர், அவரது வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால், அவர்களுக்கும் 100 யூனிட் மின்சார மானியம் வழங்கப்படும்.

அனைத்து வீடுகளுக்குமான 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்திதான். இவ்வாறு அதில் விளக்கமளிக்கப்பட்டது. இதன்மூலம் வாடகைக்கு இருப்பவர்களுக்கு மானியம் ரத்து ஆகாது என உறுதியாகியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

9 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

10 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

10 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

11 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

11 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

12 hours ago

This website uses cookies.