Categories: தமிழகம்

படிக்கும் மாணவனுக்கும், சமையல் செய்யும் குடும்பப் பெண்களுக்கும் இனி மாதம் ₹1000 : அமைச்சர் பெருமிதம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டு உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி (தமிழ்வழி) மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை இன்று கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் இன்று தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் புதல்வன் திட்டத்தினை துவக்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 75 கல்லூரிகளில் 5,112 மாணவர்கள் தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர்‌.

நிகழ்ச்சியில் பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி : இந்தியாவில் முதன் முறையாக தமிழ்நாட்டில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கக்கூடிய தமிழ் புதல்வன் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

உயர்கல்வி படிப்பதற்கு முதன்மையான மாவட்டமாக திண்டுக்கல் இருப்பதற்கு காரணம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் என்றும் தற்போது தமிழக முதலமைச்சர் அவர்களால் படிப்பவர்களுக்கும், வீட்டில் சமையல் செய்யும் குடும்பப் பெண்களுக்கும் ரூ.1000 கிடைத்து வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரி முதன்முதலாக திண்டுக்கல்லுக்கு கொடுத்தது முன்னாள் முதல்வர் கருணாநிதியும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கு வேறு எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

முன்பு எஸ்.எஸ்.எல்.சி முடித்தவர்களை வேலைக்கு அனுப்பி விடுவார்கள். ஆனால், தற்போது இலவசமாக உயர்கல்வி படிப்பதற்கு ஏற்பாடுகளை செய்தது திராவிட மாடல் அரசே என்றும் தற்பொழுது இந்த அரசு தாய், தந்தையாக இருந்து மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கி வருகிறது.

அனைவருக்கும் அழியாத செல்வமாக கல்வி செல்வம் உள்ளது. மாணவர்களுக்கு ரூ. 1000 மட்டும் அல்லாமல் வீட்டில் இருக்கும் குடும்பப் பெண்களுக்கும் ரூ. 1000 மாதம் தோறும் வழங்கி வரும் திட்டமும் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

எல்லோருக்கும் எல்லாம் என்ற அரசாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு உள்ளது” என தெரிவித்தார். முன்னதாக திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை பயன்பாட்டுக்காக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி 16 புதிய நான்கு சக்கர வாகனங்களை கொடி அசைத்து துவங்கி வைத்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

31 minutes ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

2 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

2 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

3 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

4 hours ago

ரஜினியை வாடா என்று அழைத்த ஒரே காமெடி நடிகர்? அந்த அளவுக்கு கெத்தா இவரு?

சூப்பர் ஸ்டார் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தை எவராவது நேரில் பார்த்தால் மரியாதை தானாக வரும் என்று…

4 hours ago

This website uses cookies.