Categories: தமிழகம்

5வது தலைமுறையுடன் 100வது பிறந்தநாள் விழா : 85 குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடிய மூதாட்டி!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே லிங்கவாடி பகுதியை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் இவரது மனைவி சீனியம்மாள், இவருக்கு 5 மகன்களும் 4 மகள்கள் இதில் ஒரு மகன் ராணுவத்தில் பணிபுரிந்து நாட்டிற்காக உயிர் நீத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது 100-வது பிறந்த நாளை இன்று 5 தலைமுறை பேரன், பேத்தியுடன் கொண்டாடினார். சீனி அம்மாள் சிறுவயது முதல் இன்று வரை சித்த மருத்துவத்தில் ஈடுபாடு கொண்டுள்ளார்.

இவரது பேரன் பேத்திகள் ஹோமியோபதி ஆயுர்வேதிக் போன்ற படிப்புகளை படித்து மருத்துவராக பணிபுரிந்து வருகின்றனர். இவர் தனது 75 வது வயதில் கணவனை இழந்த நிலையில் இவர் முழுமையாக கீரை வகை, நாட்டு சுண்டைக்காய், பச்சை காய்கறிகள், நாட்டுக்கோழி ஆகியவற்றை சிறப்புகளை அறிந்து அன்று முதல் ஆரோக்கியமான உணவுகளை உண்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது 100 வயது ஆகியும் கடந்த போதிலும் சமையல் செய்வது தினம்தோறும் வேலையில் செய்வது உள்ளிட்ட வேலைகளை ஆரோக்கியமாகவும் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது 100-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட குடும்பத்தைச் சேர்ந்த மகன்கள் மற்றும் பேரன்கள் முடிவு செய்தனர் இதை பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும் என்று அதையொட்டி தனது சொந்த கிராமமான நத்தம் அருகே உள்ள லிங்கவாடியில் இவரது 7 மகன், மகள்கள் 23 பேரன், பேத்திகள் 27 கொள்ளு பேரன், பேத்திகள், எள்ளு பேரன் பேத்திகள் 4 பேர் உள்ளிட்ட மொத்தம் 85 பேர் இன்று வீட்டிலிருந்து கிராம மக்கள் ஒன்றிணைந்து ஊர்வலமாக வந்து மந்தை அருகே உள்ள கோயிலில் மரக்கன்றுகளை நட்டு மேலும் விநாயகரே வழிபாடு செய்து ஊர்வலமாக ஆரவாரத்துடன் வெடி வெடித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர் தொடர்ந்து மண்டபத்தில் வைத்துள்ள சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து மூதாட்டி சீனியம்மாளுக்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி தனது 100வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர். இதைத்தொடர்ந்து ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கோவை மருதமலை கோவில் கும்பாபிஷேகத்தில் விதி மீறல்? நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்!

கோவை அருள்மிகு மருதமலை முருகன் திருக்கோயிலில் அண்மையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியதாகக்…

9 minutes ago

பூமாதா, கோமாதா… படத்தில் பேசிய வசனத்தால் ட்ரோலுக்குள்ளாகும் தமன்னா…

தமன்னாவின் புதிய திரைப்படம்… 2022 ஆம் ஆண்டு தெலுங்கில் “ஓடெலா ரயில்வே ஸ்டேஷன்” என்று ஒரு திரைப்படம் வெளிவந்தது. இதில்…

25 minutes ago

ஜெயலலிதாவுக்கு எதிராக பேச காரணம் என்ன? 30 ஆண்டுகளுக்கு பின் காரணத்தை கூறிய ரஜினிகாந்த்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலதாவை எதிர்த்து ரஜினிகாந்த் 1995ல் அனல் பறக்க பேசியது யாரும் மறக்க முடியாது. வெடிகுண்டு கலாச்சாரத்தை பற்றி…

36 minutes ago

பவன் கல்யாண் செய்த காரியத்தால் தேர்வை தவறவிட்ட மாணவர்கள்… பெற்றோர் கண்ணீர்!

ஆந்திர துணை முதல்வர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் பவன் கல்யாண் தற்போது ஆந்திரா மாநிலத்தின் துணை…

1 hour ago

19 வயது இளம்பெண்ணை சீரழித்த 23 பேர் : 7 நாட்களாக நடந்த கூட்டுப்பாலியல் பலாத்காரம்!

19 வயது இளம்பெண்ணை 23 பேர் 7 நாட்களாக கூட்டுப் பாலியல் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்து. உத்தரபிரதேச மாநிலம்…

2 hours ago

சூப்பர் ஹீரோ திரைப்பட நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கப்போகும் சீனா?

வணிக போர் சீனா மீதான வணிகப் போரை தொடங்கியிருக்கிறது அமெரிக்கா. இந்த இரு நாடுகளும் உலகின் மிகப் பெரிய சக்தி…

2 hours ago

This website uses cookies.