Categories: தமிழகம்

10 வயது சிறுமியிடம் சில்மிஷம்…103 வயது ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறை: திருவள்ளூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

திருவள்ளூர்: பூந்தமல்லி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 103 வயதைக் கடந்த ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் பரசுராமன் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆவார்,
கடந்த 2018 ஆம் ஆண்டு ஜீலை 9ம் தேதி அவரது வீட்டில் வாடகை வசித்து வந்த தம்பதியினரின் 5 ஆம் வகுப்பு படித்து வந்த 10 வயது மகளை சாக்லெட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்துச் சென்று சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார்.

அதன் பிறகு சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே பெற்றோர்கள் இது தொடர்பாக ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் மீது புகார் அளித்திருந்த நிலையில் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து மத்திய புழல் சிறையில் அடைத்திருந்தனர்.

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த அவர் மீதான வழக்கு விசாரணையில் இன்றைய தினம் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நீதிபதி அவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தும் மற்றும் ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 103 வயதைக் கடந்த ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டிருப்பது சிறுமிகள் மீதான குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு இத்தீர்ப்பு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

12 hours ago

ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…

13 hours ago

கோவைக்கு செங்கோட்டையன் திடீர் வருகை… சரமாரி கேள்வி எழுப்பிய நிருபர்கள் : மவுனம் கலையுமா?!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…

14 hours ago

தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?

திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…

14 hours ago

தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?

மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…

14 hours ago

மருமகனுடன் மாமியார் ஓட்டம்… மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்துடன் மாயம்!

உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…

15 hours ago

This website uses cookies.