10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாவட்ட ரீதியாக தேர்ச்சி சதவிகிதம் வெளியாகியுள்ளது.
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 6ம் தேதி வெளியான நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்தப் பொதுத்தேர்வை சுமார் 8 லட்சத்து 94 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ என்ற இணையதளங்களுக்கு சென்று மாணவ-மாணவிகள் தங்களுடைய பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க: வெளியானது 10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள்.. கடந்த ஆண்டை விட இந்தாண்டு கூடுதல் மாணவர்கள் தேர்ச்சி.. !!!
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.55% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு 0.16% கூடுதலான தேர்ச்சி விகிதம் ஆகும். வழக்கம் போல, மாணவர்களை விட மாணவிகள் 5.95 சதவீதம் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர். 1,364 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப்பள்ளிகள் 87.90 சதவீதமும், அரசு உதவிப் பெறும் பள்ளிகள் 91.77 சதவீதமும், தனியார் சுயநிதிப் பள்ளிகள் 97.43 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளன. தேர்வெழுதிய சிறைவாசிகளில் 260 பேரில் தேர்ச்சி பெற்றவர்கள் 228 பேர் ஆகும்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் 97.31% பேர் தேர்ச்சி பெற்று முதலிடம். வேலூர் மாவட்டத்தில் தான் குறைந்தபட்சமாக 82.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம்
அரியலூர் – 97.31%
சிவகங்கை – 97.02%
ராமநாதபுரம் 96.36%
கன்னியாகுமரி – 96.24%
திருச்சி – 95.23%
விருதுநகர் -95.14%
ஈரோடு -95.08%
பெரம்பலூங்ர் – 94.77%
தூத்துக்குடி – 94.39%
விழுப்புரம் – 94.11%
மதுரை – 94.07%
கோயம்புத்தூர் – 94.01%
கரூர் – 93.59%
நாமக்கல் – 93.51%
தஞ்சாவூர் – 93.40%
நெல்லை – 93.04%
தென்காசி – 92.69%
தேனி – 92.63%
கடலூர் – 92.63%
திருவாரூர் – 92.49%
திருப்பூர் – 92.38%
திண்டுக்கல் – 92.32%
புதுக்கோட்டை – 91.84%
சேலம் – 91.75%
கிருஷ்ணகிரி – 91.43%
நீலகிரி – 90.61%
மயிலாடுதுறை – 90.48%
தருமபுரி – 90.45%
நாகை – 89.70%
சென்னை – 88.21%
திருப்பத்தூர் 88.20%
காஞ்சிபுரம் – 87.55%
செங்கல்பட்டு – 97.38%
கள்ளக்குறிச்சி – 86.83%
திருவள்ளூர் – 86.52%
திருவண்ணாமலை – 86.10%
ராணிப்பேட்டை – 85.48%
வேலூர் – 82.07%
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.