Categories: தமிழகம்

10ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை…திருவாரூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

திருவாரூரில் பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை.மகிளா நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் கோம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான சரண்ராஜ் என்கிற இளைஞர் கடந்த 2021 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்று வந்த பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அடுத்து பெற்றோர்கள் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். 

புகாரின் அடிப்படையில் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரன்ராஜ் மீது பெண்ணை கடத்தி செல்லுதல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரண்ராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து சரண்ராஜ் பிணையில் வெளியில் வந்த நிலையில் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். 

இந்த வழக்கு திருவாரூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி விஜயக்குமார் குற்றவாளி சரண்ராஜீக்கு அதிகபட்ச தண்டனையாக 27 ஆண்டுகள் சிறை தண்டனையும்,நான்காயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார். 

இந்த வழக்கில் ஒரு வருடத்திற்குள் 27 ஆண்டுகள் குற்றவாளிக்கு சிறை தண்டனை வழங்கிய திருவாரூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தின் தீர்ப்பை பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர். 

UpdateNews360 Rajesh

Recent Posts

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

9 hours ago

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

10 hours ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

11 hours ago

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

11 hours ago

அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?

அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

11 hours ago

திருமாவுடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்.. 14 ஆண்டுகளுக்கு பின் மனமாற்றம் : ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…

12 hours ago

This website uses cookies.