கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே 10ஆம் வகுப்பு பொதுதேர்வு அறையில் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கடந்த 6ம் தேதி பொதுத்தேர்வு துவங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் 116 தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மணலிக்கரை அருகே உள்ள புனித மரிய கொரீட்டி மேல்நிலைப்பள்ளியில் கடந்த 6ம் தேதி மாணவ, மாணவிகள் தமிழ் தேர்வு எழுதினர். அந்த பள்ளியில் உள்ள ஒரு தேர்வறை கண்காணிப்பாளராக அருமனை அருகே உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் வேலவன் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார்.
இவர் பணியில் இருந்த தேர்வறையில் வேர்கிளம்பி பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வு எழுதினார். அந்த மாணவியின் அருகில் சென்ற ஆசிரியர் வேலவன் மாணவியின் உடலில் தொட்டு பேசி சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால். அதிா்ச்சி அடைந்த மாணவி தேர்வு எழுதும் சமயத்தில் என்ன சொல்வது எனத் தெரியாமல் இருந்துள்ளார். தேர்வு முடிந்ததும் வீட்டுக்கு சென்ற மாணவி பெற்றோரிடம் ஆசிரியரின் தவறான நடவடிக்கை பற்றி கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் இதுகுறித்து புகார் கூறினர். இதையடுத்து, பெற்றோர் உதவியுடன் சம்பந்தப்பட்ட ஆசிரியர் குறித்து பள்ளி கல்வித்துறைக்கு புகார் அளித்ததுடன், குழித்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர்.
இதையடுத்து, இந்த புகாரின்பேரில் குழித்துறை அனைத்து மகளிர் போலீஸார் போஸ்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வேலவனை கைது செய்தனர். தேர்வு அறையில் வைத்து மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரின் செயல் பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.