ராணிப்பேட்டை ; ராணிப்பேட்டை அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த வேன் டிரைவரை போக்சோ வழக்கில் கைது செய்த ராணிப்பேட்டை மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை பாரதி நகர், காரை, காட்டன் பஜார் தெருவைச் சேந்தவர் சுந்தர்ராஜ் (28), சிப்காட்டில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் டிரைவராக பணியாற்று வருகிறார். சுந்தர்ராஜ்க்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில் அவர் பணி புரியும் நிறுவனத்தில் கொரோனா காலத்தில் அக்ராவரம் மலைமேடு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி வேலைக்கு சேர்ந்து சில மாதங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது, சுந்தர்ராஜனுக்கும், சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
சிறுமி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டு மீண்டும் லாலாபேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து பத்தாம் வகுப்பு கல்வி பயின்று வந்தார். இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் கூறி சுந்தர்ராஜ் அவரை வெளியூர் அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் சிறுமியை காணவில்லை என்று சிப்காட் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியையும், சுந்தர்ராஜை கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து, ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வாசுகி, போக்சோ வழக்கில் வழக்கு பதிவு செய்து சுந்தர்ராஜை இன்று கைது செய்தனர். தொடர்ந்து அவரை வேலூர் மகிளா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
This website uses cookies.