தமிழகம்

பாழடைந்த கட்டிடம்.. பேச்சு கொடுத்த இளைஞர்.. 10-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை!

குமரி மாவட்டத்தில், 10ஆம் வகுப்பு மாணவி தனது இன்ஸ்டாகிராம் தோழருடன் நெருங்கி இருந்ததில் கர்ப்பமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி: குமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெர்வின் (21). இவருக்கும், அருகில் உள்ள பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இவர் அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இதனையடுத்து, பள்ளிக்குச் சென்று வரும்போது இரண்டு பேரும் பேசி வந்து உள்ளனர். இந்த நிலையில், சிறுமியை கடந்த செப்டம்பர் மாதம் தனது அந்த இளைஞர் தனது கிராமத்துக்கு அழைத்து வந்து உள்ளார்.

பின்னர், அங்கு உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றிற்கு சிறுமியை அழைத்துச் சென்று உள்ளார். அங்கு வைத்து பேச்சு கொடுத்த இளைஞர், உன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி உள்ளார். இதனையடுத்து, சிறுமியுடன் உடலுறவு கொண்டு உள்ளார். பின்னர், இதுபோன்று பலமுறை நடந்து உள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. எனவே, சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். அப்போது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய், இது குறித்து சிறுமியிடம் விசாரித்து உள்ளார்.

இதையும் படிங்க: அரியலூரில் இறங்கிய தவெக கொடி.. புஸ்ஸி ஆனந்தால் உட்கட்சி பூசலா? பகீர் காரணம்!

அப்போது, நடந்த விஷயங்களை சிறுமி கூறியுள்ளார். இதனையடுத்து, குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான இளைஞரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

5 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

6 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

7 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

7 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

8 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

8 hours ago

This website uses cookies.