தமிழகம்

9ஆம் வகுப்பு மாணவியின் குழந்தைக்கு தந்தையான 10ஆம் வகுப்பு மாணவன்.. தஞ்சையில் பகீர் சம்பவம்!

தஞ்சையில் 9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 10ஆம் வகுப்பு மாணவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டு உள்ளார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ராசாமிராசுதார் அரசு மருத்துவமனைக்கு சிறுமி ஒருவர், வயிற்று வலி பிரச்னை எனக் கூறி சிகிச்சைக்காக வந்து உள்ளார். 9ஆம் வகுப்பு மாணவியான இவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது, அவர் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்து உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பின்னர் சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்று உள்ளனர். இந்த நிலையில், சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. பின்னர், இது தொடர்பாக சிறுமியிடம் பெற்றோர் விசாரித்து உள்ளனர். அதில், சிறுமி வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவனைக் காதலிப்பதாக கூறியுள்ளார்.

அது மட்டுமின்றி, பிறந்து உள்ள குழந்தைக்கு அந்த மாணவன் தான் காரணம் எனவும் சிறுமி பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனையடுத்து, இது குறித்து தஞ்சை, வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். இதன் பேரில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

இதையும் படிங்க: சபரிமலை 18 படியில் முதுகை காட்டிய போலீசார்.. மரபு மீறப்பட்டதா? கொதித்தெழும் பக்தர்கள்!

இந்த விசாரணையில், சிறுமி கைகாட்டிய 10ஆம் வகுப்பு மாணவனான 15 வயது சிறுவனை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். இவ்வாறு 9ஆம் வகுப்பு மாணவியை 10ஆம் வகுப்பு மாணவன் கர்ப்பமாக்கி, சிறை சென்ற சம்பவம் தஞ்சையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

காதல் திருமணத்திற்கு காத்திருந்த இளம்பெண் கொலை… கடைசியாக பேசிய காதலன் : காத்திருந்த டுவிஸ்ட்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…

3 minutes ago

விஜய் சேதுபதியை திட்டிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த சாந்தனு! அப்படி என்னதான் நடந்தது?

தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…

8 minutes ago

கலவரத்தை தூண்டும் எம்புரான், இது திட்டமிட்ட சதி- பொங்கி எழுந்த சீமான்

அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…

51 minutes ago

3 மணி நேர உண்ணாவிரதத்தை மறந்து விடுவோமா? கச்சத்தீவு கபட நாடகம் நடத்தும் திமுக : அண்ணாமலை அட்டாக்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…

2 hours ago

ஆதரவில்லாம இருந்தேன், அந்த வலியை தாங்கிக்க முடியல- மனம் நொந்த விக்ரம் பட இயக்குனர்..

கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

3 hours ago

திரைக்கு வந்து சில ‘நாட்களே’ ஆன… சன் டிவியிடம் சரண்டர்… சிக்கித் தவிக்கும் ஜனநாயகன்..!!

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…

3 hours ago

This website uses cookies.