புதுச்சேரி : கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி முதலியார்பேட்டையை சேர்ந்தவர் நித்தியானந்தன், அவரது மகன் சித்து என்ற பிரணவ் (வயது 11). அங்குள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகின்றான், சுத்துகேனியில் உள்ள தனது தாத்தா வேலுச்சாமி வீட்டுக்கு சித்து சென்றுள்ளான்,
அங்கு நேற்று இரவு அம்மன் கோவில் திருவிழா நாடகம் நடைபெற்றது, அப்போது சாமியை ஊர்வலமாக எடுத்து செல்ல பயன்படுத்தப்படும் வண்டியில் அமர்ந்து சித்து உள்பட சிலர் நாடகம் பார்த்து கொண்டிருந்தனர்.
நள்ளிரவு நேரத்தில் வண்டியில் கட்டப்பட்டிருந்த மின்விளக்கில் (போகஸ் விளக்கு) இருந்து திடீரென மின்கசிவு ஏற்பட்டதை அடுத்து வண்டியில் அமர்ந்து இருந்தவர்களின் மீது மின்சாரம் தாக்கியதால் பலரும் எகிறி குதித்து ஓடினர்.
ஆனால் சித்துவால் ஓட முடியாததால் மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்துள்ளான், உடனடியாக அக்கம்பக்கத்தினர் சித்துவை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சித்து உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் தனியார் மருத்துவமனை வந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அஜ்ஜாக்கிரதையாக இருந்த கோயில் நிர்வாகத்தினர் மற்றும் எலக்ட்டிஸியன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
11 வயது மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது..
"சென்னை 28" மூன்றாம் பாகம் வருகிறதா? கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு,தன்னுடைய திரைப்பயணத்தை நடிகராக தொடங்கினார்.உன்னை சரணடைந்தேன்,ஏப்ரல் மாதத்தில்,சிவகாசி உள்ளிட்ட…
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி,ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படத்தின் டீசர்…
இந்திய அணியின் மறக்க முடியாத தோல்வி! கடந்த 2000 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா…
பாஜக - அதிமுக கூட்டணி குறித்து 6 மாதத்திற்கு எந்த ஒரு கேள்வியையும் கேட்க வேண்டாம் என தமிழிசை செளந்தரராஜன்…
பட வாய்ப்புக்காக அலையும் காக்கா முட்டை ரமேஷ் தமிழ் சினிமாவில் 2015-ஆம் ஆண்டு இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ‘காக்கா…
திருவாரூர் அருகே காதல் திருமணம் செய்த மனைவியைக் கொலை செய்து விட்ட தப்பி ஓடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.…
This website uses cookies.