நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை எம் ஜி ஆர் பேருந்து நிலையத்திற்கு அருகே சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் அரசினர் கூர்நோக்கு இல்லம் செயல்படுகிறது.
இங்கு திருநெல்வேலி தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 18 வயதிற்கு கீழ் குற்ற செயல்களில் ஈடுபட்ட 20 சிறார்கள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலையில் இரவு வேளைக்கான உணவை வாங்கிக் கொண்ட சிறுவர்களில் 12 பேர் திடீரென கூர்நோக்கு இல்லத்தில் இருந்து வார்டனை தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
உடனடியாக நடந்த சம்பவம் தொடர்பாக கூர்நோக்கு இல்லத்தில் உள்ள வார்டன் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்து உள்ளார்.
இதனைத் தொடர்ந்து நெல்லை மாநகர காவல் துறை ஆணையாளர் ராஜேந்திரன், நெல்லை மாநகர கிழக்கு காவல்துறை துணை ஆணையர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் நெல்லை எம் ஜி ஆர் பேருந்து நிலையம், பாளையங்கோட்டை ரயில் நிலையம், சந்திப்பு ரயில் நிலையம், மார்க்கெட் என மக்கள் கூடும் பகுதிகளில் இந்த சிறுவர்கள் தப்பி ஓடி உள்ளார்களா என தேடும் பணியில் நெல்லை மாநகர காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த், அரசினர் கூர்நோக்கு இல்லத்தை ஆய்வு செய்து இங்கு பாதுகாப்பாக இருப்பதாகவும், கூர்நோக்கு இல்லத்தில் உள்ள சிறுவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இருப்பதாகவும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார்.
இந்நிலையில் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவம் மாநகர காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கூர்நோக்கு இல்லத்தில் உள்ள கண்காணிப்பாளர் ஜெய்சங்கர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி உள்பட அதிகாரிகள், கூர்நோக்கு இல்லத்தின் வாசலில் இருந்து சிசிடிவி காட்சிகள் மற்றும் மாநகர முக்கிய சந்திப்புகளில் உள்ள சிசிடிவிகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
வெப் தொடரில் சர்ச்சை – ரசிகர்கள் அதிர்ச்சி பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ஜோதிகா, சமீபத்தில் வெளியாகிய "டப்பா…
இந்திய அணியை வம்பிழுக்கும் சக்லைன் முஸ்தாக் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது,இதில்…
அஜித்தின் Moschino Couture சட்டை வைரல் நடிகர் அஜித் குமார் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.அவரது…
அசிங்கப்பட்ட ஆறடி நடிகர் தமிழ் சினிமாவில் தன்னுடைய கட்டான உடலால் ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அந்த நடிகர்…
கோவப்பட்ட சந்தீப் கிஷன் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருப்பவர் விஜய்,இவர் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென்று தனி…
பழைய பகையை தீர்க்குமா இந்தியா சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் நாக் அவுட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது,குரூப் B பிரிவில்…
This website uses cookies.