Categories: தமிழகம்

வார்டனை தாக்கிவிட்டு 12 சிறுவர்கள் எஸ்கேப்: ஆய்வு நடத்திய மறுநாளே அரசு கூர்நோக்கு இல்லத்தில் பரபரப்பு!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை எம் ஜி ஆர் பேருந்து நிலையத்திற்கு அருகே சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் அரசினர் கூர்நோக்கு இல்லம் செயல்படுகிறது.

இங்கு திருநெல்வேலி தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 18 வயதிற்கு கீழ் குற்ற செயல்களில் ஈடுபட்ட 20 சிறார்கள் உள்ளனர்.

இந்நிலையில் இன்று மாலையில் இரவு வேளைக்கான உணவை வாங்கிக் கொண்ட சிறுவர்களில் 12 பேர் திடீரென கூர்நோக்கு இல்லத்தில் இருந்து வார்டனை தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.


உடனடியாக நடந்த சம்பவம் தொடர்பாக கூர்நோக்கு இல்லத்தில் உள்ள வார்டன் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்து உள்ளார்.

இதனைத் தொடர்ந்து நெல்லை மாநகர காவல் துறை ஆணையாளர் ராஜேந்திரன், நெல்லை மாநகர கிழக்கு காவல்துறை துணை ஆணையர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் நெல்லை எம் ஜி ஆர் பேருந்து நிலையம், பாளையங்கோட்டை ரயில் நிலையம், சந்திப்பு ரயில் நிலையம், மார்க்கெட் என மக்கள் கூடும் பகுதிகளில் இந்த சிறுவர்கள் தப்பி ஓடி உள்ளார்களா என தேடும் பணியில் நெல்லை மாநகர காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த், அரசினர் கூர்நோக்கு இல்லத்தை ஆய்வு செய்து இங்கு பாதுகாப்பாக இருப்பதாகவும், கூர்நோக்கு இல்லத்தில் உள்ள சிறுவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இருப்பதாகவும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார்.

இந்நிலையில் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவம் மாநகர காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கூர்நோக்கு இல்லத்தில் உள்ள கண்காணிப்பாளர் ஜெய்சங்கர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி உள்பட அதிகாரிகள், கூர்நோக்கு இல்லத்தின் வாசலில் இருந்து சிசிடிவி காட்சிகள் மற்றும் மாநகர முக்கிய சந்திப்புகளில் உள்ள சிசிடிவிகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

‘இனி நம்மல யாருமே பிரிக்க முடியாது’.. தண்டவாளத்தில் கட்டி அணைத்தவாறு தற்கொலை செய்த காதல் தம்பதி!

வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…

12 minutes ago

ராமதாஸ் முடிவுக்கு எதிராக போர்க்கொடி.. அன்புமணிக்கு ஆதரவாக எழுந்த முதல் குரல்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…

33 minutes ago

பூப்படைந்த பட்டியலின மாணவிக்கு தனியார் பள்ளியில் அரங்கேறிய அவலம்.. அதிர்ச்சி வீடியோ!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…

1 hour ago

கோவைக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… ஜெயிலர் 2 குறித்து முக்கிய அப்டேட்!

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…

2 hours ago

எரிச்சல் ஆகுது, படம் முழுவதும் Instagram Reelsதான்- GBU பார்த்து கொந்தளித்த ரசிகர்கள்…

வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…

2 hours ago

விஜய் பட வசனத்தை வைத்து அலறவிட்ட அஜித்.. GOOD BAD UGLY படத்தை கொண்டாடும் ரசிகர்கள்!!

அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…

3 hours ago

This website uses cookies.