புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் கோட்டைப்பட்டினம் ஆகிய துறைமுகங்களிலிருந்து நேற்று 255 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்திய கடல் எல்லை பகுதியில் நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் அங்கே வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, மாலதி, முருகானந்தம் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுகள் மற்றும் அதில் சென்ற சிவக்குமார் (42), கலையரசன் (23), லோகேஸ்வரன் (24), சக்தி (25), பிரபு (35), சுந்தரமூர்த்தி (45), முருகானந்தம் (42), பாரதிதாசன் (35), ரவி (25), சசிகுமார் (40) விசாலிங்கம் (46), மயில்ராஜன் (23) உள்ளிட்ட 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மயிலட்டி துறைமுகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், சிறைபிடிப்பதும் வாடிக்கையாகிவிட்ட நிலையில், இன்று இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.