Categories: தமிழகம்

12 வயது சிறுமியின் வாயை பொத்தி கூலித்தொழிலாளி செய்த கொடூர சம்பவம் : ஊரை விட்டு ஓடிய போது நேர்ந்த கதி!!

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 40). இவர் பனமரத்துப்பட்டி அடுத்துள்ள ஆத்துப்புதூரில் கல் உடைக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த சில மாதங்களாக ஆத்துப்புதூரில் சம்பத் தங்கி கல் உடைக்கும் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சம்பத் அதே பகுதியில் வசிக்கும் ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து பனமரத்துப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். பின்னர் இதுகுறித்து கொண்டலாம்பட்டி மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

இதன் பெயரில் சேலம் ரூரல் டி.எஸ்.பி. தையல்நாயகி மற்றும் போலீசார் விசாரித்து கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

அப்போது சம்பத் பனமரத்துப்பட்டி அருகே உள்ள கரடு பகுதியில் தப்பி ஓடி உள்ளார். அவரை காவல்துறையினர் துரத்திச் சென்றனர். அப்போது சம்பத் கால் தவறி கீழே விழுந்து வலது காலில் படுகாயம் அடைந்தான்.

பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் சம்பத் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதன்பின் சம்பத் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பத்திற்கு வலது காலில் பலத்த காயமடைந்து உள்ளார். இதனால் அவருக்கு சிகிச்சை முடிந்த பின்னர் சேலம் சிறையில் அடைக்க காவல்துறையினர் முடிவு செய்து உள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

10 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

10 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

11 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

12 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

13 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

15 hours ago

This website uses cookies.