Categories: தமிழகம்

பள்ளி பேருந்து மோதி 12ம் வகுப்பு மாணவன் பரிதாப பலி: பேருந்துக்காக காத்திருந்த போது விபரீதம்…பெற்றோர் கதறல்..!

தென்காசி: கடையம் அருகே மாணவன் மீது பள்ளிப் பேருந்து மோதிய விபத்தில் மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள ஆழ்வார்குறிச்சி அடுத்த புதுகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அருணாச்சலம் என்பவரது மகன் சைலப்பன்.

இவர் ஆழ்வார்குறிச்சியில் உள்ள பிரபல தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் தனது ஊருக்குச் செல்ல ஆழ்வார்குறிச்சி பேருந்து நிலையத்திற்கு வந்த அவர், தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது ஆழ்வார்குறிச்சியில் இருந்து பொட்டல்புதூர் செல்வதற்காக வந்த அதே பள்ளிப் பேருந்து எதிர்பாராத விதமாக அங்கு நின்று கொண்டிருந்த மாணவன் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த மாணவனை அப்பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று முதலுதவி அளித்து, அம்பை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார்.

சிகிச்சை மேற்கொண்டு பின்னர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் பள்ளி பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

7 hours ago

ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…

8 hours ago

கோவைக்கு செங்கோட்டையன் திடீர் வருகை… சரமாரி கேள்வி எழுப்பிய நிருபர்கள் : மவுனம் கலையுமா?!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…

9 hours ago

தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?

திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…

9 hours ago

தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?

மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…

9 hours ago

மருமகனுடன் மாமியார் ஓட்டம்… மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்துடன் மாயம்!

உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…

11 hours ago

This website uses cookies.