Categories: தமிழகம்

வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை: காரணம் அறிந்து அதிர்ந்து போன பெற்றோர்…காஞ்சியில் சோகம்..!!

காஞ்சிபுரம்: வீட்டில் தனியாக இருந்த 12ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு 49 வது வார்டுக்குட்பட்ட வேதாசலம்நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (வயது 40). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகின்றார். இவரது மனைவி காஞ்சிபுரம் அருகே மாங்கால் கூட்டுசாலையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றார். இவர்களுக்கு விஜய் (வயது17) என்ற மகனும் செல்வி என்ற ஒரு மகளும் உள்ளனர்.

விஜய் காஞ்சிபுரம் ஆண்டர்சன் மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வருகிறார். கொரோனாதொற்று காலத்தில் வீட்டிலேயே அடைபட்டு கிடந்த விஜய்க்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மீண்டும் பள்ளிக்கூடங்கள் திறந்த நிலையில் விஜய் அவ்வப்போது பள்ளிக்கு செல்வதில்லை என பெற்றோர்கள் தெரிவித்தனர்.

மேலும் ஐந்தாயிரம் ரூபாய் கல்வி கட்டணம் கட்ட பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் உடன் படிக்கும் பள்ளி மாணவர்கள் அவ்வப்போது தன்னை கிண்டல் செய்வதாகவும் விஜய் வீட்டில் கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று பள்ளிக்கூடம் விடுமுறை என கூறிவிட்டு வீட்டில் தனியாக இருந்துள்ளார். பாலாஜி ஒரு துக்க நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்று விட்டார். அவர் மனைவியும் வேலைக்கு சென்று விட்டார். மகள் செல்வியும் பள்ளிக்கூடம் சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த மாணவன் விஜய் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை அறியாத விஜய்யின் பெற்றோர்கள் வீட்டுக்கு வந்து சற்று நேரம் கழித்து விஜய்யை தேடி உள்ளார்கள். மற்றொரு அறையின் மேற்கூறையில் உள்ள ஹாங்கரில் கயிற்றை மாட்டி விஜய் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்வுற்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட +2 மாணவன் விஜய்யின் உடலை கைபற்றி பிரோத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரத்தில் +2 மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி

மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…

1 day ago

உண்மையிலே அதிமுகவை பாராட்டியே ஆகணும்… திருமாவளவன் திடீர் டுவிஸ்ட்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…

1 day ago

டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…

மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…

1 day ago

உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!

அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…

1 day ago

வக்பு மசோதாவுக்கு கனிமொழி, திருச்சி சிவா மறைமுக ஆதரவு? தம்பிதுரை எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…

1 day ago

பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!

பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…

1 day ago

This website uses cookies.