தமிழகம்

பள்ளிக்கு தடா போட பாலியல் கொடுமையைக் கையிலெடுத்த +2 மாணவி.. இறுதியில் ட்விஸ்ட்!

பள்ளிக்குச் செல்ல விரும்பாத நிலையில், போலியாக பாலியல் வன்கொடுமை புகார் அளித்த 12ம் வகுப்பு மாணவிக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், “வழக்கம் போல் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பி கொண்டிருந்த சிறுமியை, இருவர் மயக்க மருந்து தடவிய கைக்குட்டையைப் பயன்படுத்து முகத்தில் அழுத்தியுள்ளனர்.

பின்னர், மாணவியை வனப்பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும், மாணவியை மதுபாட்டில்களால் தாக்கியதாக”வும் மாணவி புகாரில் கூறியிருந்தார். இதன்படி, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர்.

அதன் ஒரு பகுதியாக, மாணவியை மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை எனத் தெரிவித்தது மட்டுமின்றி, மதுபாட்டிலால் தாக்கியதற்கான காயங்கள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்தச் சிறுமி பள்ளிக்குச் செல்லும் வழியில் இருக்கும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அதில், அந்த சிறுமி பள்ளிக்குச் சென்று வருவது பதிவாகி இருந்துள்ளது. அதேநேரம், சந்தேகப்படும்படியாக எதுவும் பதிவாகவில்லை என்பதால், மாணவியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: அஜித்துடன் இணையும் பிரபலம்.. 25 வருடங்களுக்கு பிறகு ஜோடி சேர்ந்த நடிகை!

இந்த விசாரணையில், அந்தச் சிறுமி ஒரு இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் சிறுமியின் வீட்டுக்குத் தெரியவர, அவரைக் கண்டித்துள்ளனர். மேலும், சிறுமிக்கு படிப்பின் மீது பெரிய அளவில் நாட்டம் இல்லாததாலும், இதனால் பள்ளி செல்ல விரும்பாத நிலையிலும், தன்னை சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலியான புகார் அளித்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, சிறுமிக்கு அறிவுரை வழங்கிய போலீசார், அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Hariharasudhan R

Recent Posts

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

8 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

8 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

9 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

9 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

9 hours ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

10 hours ago