கரூரில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூரை அடுத்த வெண்ணமலை அரசன் நகரைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் ஸ்ரீனா (17). இவர் வெண்ணமலையில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஸ்ரீனாவுக்கு தலையில் பொடுகு பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது பெற்றோர் மாணவிக்கு பாப் கட்டிங் செய்துள்ளனர். இதன் காரணமாக அவர் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பெற்றோருடன் நேற்று அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த போது மகளை காணாமல் பெற்றோர் தேடியுள்ளனர். அப்போது வீட்டினுள் தூக்கு போட்டுக் கொண்ட நிலையில் இருந்துள்ளார். மாணவியை மீட்ட பெற்றோர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது பற்றி மாணவியின் தந்தை வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.