கோவை: தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிமுக வேட்பாளர் உட்பட 14 வேட்பாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் பதிவான வாக்குகள் ஜிசிடி கல்லூரியில் இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. திமுக வேட்பாளர்கள் பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. பல இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.
இந்நிலையில் 32வது வார்டு வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்ததாக அதிமுக, பாஜக உள்ளிட்ட 14 வேட்பாளர்கள் மற்று. கட்சி முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்தில் தரையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், ”32வது வார்டு சங்கனூர் திமுக வேட்பாளராக பாபு என்கிற பார்த்திபன் போட்டியிட்டார். அதிமுக வேட்பாளராக முருக பாபு, பாஜக வேட்பாளராக புவனேஷ் ஆகியோர் களம் கண்டனர். இந்த 32வது வார்டு வாக்கு எண்ணிக்கையின் போது திமுக கட்சியை சேர்ந்த வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.
இதுநாள் வரை இந்த வார்டில் திமுகவினர் வெற்றி பெற்றது கிடையாது. திமுக அலுவலகம் எப்போதும் பூட்டியே கிடக்கும். அந்த வார்டில் முழு பணிகளையும் அதிமுகவினரே செய்து வந்தோம். எங்கள் வெற்றிதான் பிரகாசமாக இருந்தது. ஆனால் வாக்கு எண்ணிக்கையின் போது திமுக முன்னிலை பெற்றுள்ளது. அங்கு 4 வாக்குப் பெட்டிகள் மாற்றப்பட்டுள்ளது.
எங்களது கையெழுத்து போலியாக உள்ளது. வரிசை எண்ணும் மாற்றப்பட்டுள்ளது. எனவே திமுகவினர் திட்டமிட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர். இதனைக்கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்த வார்டில் மறுவாக்குபதிவு நடத்த வேண்டும். என்றனர்.
இந்த திடீர் தர்ணா போராட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் தர்ணாவில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி வெளியேற்றினர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.