கஞ்சா அடிப்பதற்காக செல்போன் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவதாக 14 வயது சிறுவன் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக இரவு காத்திருந்தார். செல்போனில் பேசிக்கொண்டு இருந்த அவரிடம் இருந்து கண் இமைக்கும் நேரத்தில் 14 வயது சிறுவன் செல்போனை பறித்து கொண்டு ஓடினான். அச்சிறுவனை பின் தொடர்ந்து துரத்தி சென்றவாறு திருடன் திருடன் என கூச்சலிட்டுள்ளார்.
இவரது சத்தம் கேட்டு அங்கு இருந்தவர்கள் திருட்டு சிறுவனை மடக்கி பிடித்தனர். பின்பு பேருந்து நிலையத்தில் உள்ள தூணில் அவனை கட்டி வைத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அச்சிறுவனிடம் எதற்கு திருடின என கேட்டதற்கு அவன் அளித்த பதில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. “பசங்களோட சேர்ந்து தண்ணி அடிச்சி சுத்திட்டு இருக்கேன். திருடின பொருளை விற்று கஞ்சா அடிப்பேன்,” என அந்த சிறுவன் கூறியதை அங்கிருப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தஞ்சையில் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. வெளிப்படையாக கஞ்சா விற்பதை கண்டும் காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை என பேருந்து நிலையத்தில் கடை நடத்துபவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுவர்களை கஞ்சா போதைக்கு அடிமையாக்கி திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஒரு கும்பல் ஈடுபடுத்தி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…
சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
This website uses cookies.