14 வயது மகளை கேலி கிண்டல் செய்தவரை தட்டிக் கேட்ட தந்தைக்கு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வீராணம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் பொப்பன் என்ற சின்னராஜ் (48).
இவரது மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவரை அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினரான ராஜபெருமாள் மகன் முருகன் என்ற சண்முகம் (21) என்பவர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து முருகன் தன்னை கிண்டல் செய்வதாக ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி அவரது பாட்டியிடம் தெரிவித்துள்ளார்
இதையும் படியுங்க: தமிழ்நாட்டில் 3வது மூன்றெழுத்து முதலமைச்சர்.. த.வெ.க மாநாட்டிற்காக ஒட்டப்பட்ட போஸ்டர்..!!
அவரது பாட்டி ஒப்பனிடம் தெரிவிக்கவே அவர் நேற்று மாலை வீராணம்பட்டி விலக்கு சாலையில் உள்ள தேநீர் கடை அருகே முருகனை அழைத்து தனது மகளை கிண்டல் செய்யக்கூடாது என்று கண்டித்துள்ளார்.
அப்போது முருகன் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பொப்பன் கண்டிக்கும் பொழுது அவருக்கும் முருகனுக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நடந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த முருகன் வீட்டிற்கு சென்று கத்தி எடுத்து வந்து பொப்பனை வயிற்றில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த பொப்பனை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே பொப்பன் உயிரிழந்து விட்டதாக கூறியதால் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலைக்கு முக்கிய காரணம் அப்பகுதியில் அதிகளவில் கஞ்சா மற்றும் மது பொருட்கள் புலங்குவதே காரணம் எனப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என அப்போது மக்கள் தெரிவித்துள்ளனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
This website uses cookies.