விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் இருக்கும் மகள் முறையைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கர்ப்பம் ஆக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு மலைவாழ் மக்கள் குடியிருப்பைச் சேர்ந்தவர் வெள்ளையன். இவர் ராமேஸ்வரம் பகுதியில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு வனக்காப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால், தென்காசி மாவட்டம் புளியங்குடி தலையணை பகுதியைச் சேர்ந்த மேரி என்பவரை கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
மேரிக்கு நான்கு பெண் குழந்தைகள் மற்றும் மூன்று ஆண் குழந்தைகள் உட்பட ஏழு பிள்ளைகள் உள்ளனர். கடந்த ஒரு வருடங்களாக வேலையில்லாத வெள்ளையன் தனது இரண்டாவது மனைவி மேரி மற்றும் அவரது குழந்தைகளுடன் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அத்திகோவில் என்ற பகுதியில் அமைந்துள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பில் இருந்து வந்துள்ளார்.
அச்சமயத்தில் மேரியின் கடைசி மகளான 15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து அவரை கர்ப்பம் ஆக்கியுள்ளார். தற்செயலாக நேற்று அரசு மருத்துவமனைக்கு ஊசி போடச்சென்ற சிறுமியை சோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து தகவல் அறிந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்த மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி சிறுமியிடம் விசாரணை நடத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வெள்ளையன் மீது புகார் அளித்துள்ளார்.
அவரின் புகாரையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வெள்ளையன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளின் உறவு முறையில் உள்ள ஒரு சிறுமியை அப்பா முறையில் உள்ள ஒரு நபர் கர்ப்பம் ஆக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.