விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் இருக்கும் மகள் முறையைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கர்ப்பம் ஆக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு மலைவாழ் மக்கள் குடியிருப்பைச் சேர்ந்தவர் வெள்ளையன். இவர் ராமேஸ்வரம் பகுதியில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு வனக்காப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால், தென்காசி மாவட்டம் புளியங்குடி தலையணை பகுதியைச் சேர்ந்த மேரி என்பவரை கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
மேரிக்கு நான்கு பெண் குழந்தைகள் மற்றும் மூன்று ஆண் குழந்தைகள் உட்பட ஏழு பிள்ளைகள் உள்ளனர். கடந்த ஒரு வருடங்களாக வேலையில்லாத வெள்ளையன் தனது இரண்டாவது மனைவி மேரி மற்றும் அவரது குழந்தைகளுடன் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அத்திகோவில் என்ற பகுதியில் அமைந்துள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பில் இருந்து வந்துள்ளார்.
அச்சமயத்தில் மேரியின் கடைசி மகளான 15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து அவரை கர்ப்பம் ஆக்கியுள்ளார். தற்செயலாக நேற்று அரசு மருத்துவமனைக்கு ஊசி போடச்சென்ற சிறுமியை சோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து தகவல் அறிந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்த மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி சிறுமியிடம் விசாரணை நடத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வெள்ளையன் மீது புகார் அளித்துள்ளார்.
அவரின் புகாரையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வெள்ளையன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளின் உறவு முறையில் உள்ள ஒரு சிறுமியை அப்பா முறையில் உள்ள ஒரு நபர் கர்ப்பம் ஆக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.