இந்தியாவில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தின் போது வெள்ளையருக்கு எதிராக முதல் சுதேசி நீராவி கப்பல் நிறுவனத்தை தொடங்கியவர் என்பதால் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படுபவர் வ.உ.சி.
மேலும், தேசத்தின் விடுதலைக்காக ஆயுள் சிறை சென்று, செக்கிழுத்தவர் என்பதால் செக்கிழுத்த செம்மல் எனும் அழைக்கப்படுபவர். இந்த போட்டதற்காக போராடிய வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி அவர்களின் உருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தினவேலு தலைமையில் வ.உ.சி அவர்களின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் நிர்வாகிகள் சீனிவாசன், நாகநாதர்பாண்டி, பரமசிவம், பத்மநாபன், மாமன்ற உறுப்பினர் அரவிந்த் உட்பட நூற்றுக்கு மேற்பொருள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
போல் ஓபன்னீர்செல்வம் ஆதரவாளரான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் வ உ சி அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதில் முன்னாள் அமைச்சர் கு.பா.கிருஷ்ணன், ஜவகர், மற்றும் ஆதரவாளர்கள் 50 க்குமேற்பட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
இதே போல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமையில் வ.உ.சி சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் திருச்சி மாநகராட்சி மேயர் சார்பாக தொண்டைமான் உட்பட 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பராசக்தி ஹீரோ சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் “பராசக்தி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் சில…
ஸ்ரீக்கு என்ன ஆச்சு? சமீப நாட்களாக நடிகர் ஸ்ரீ குறித்துதான் சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நடிகர் ஸ்ரீ …
பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென புகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளம் ஒன்றுக்கு பிரமேலதா…
சர்ச்சையை கிளப்பிய வீடியோ “சிறகடிக்க ஆசை” என்ற பிரபலமான டிவி தொடரில் வித்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக…
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யா பின்னாளில் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகர்ஜூனாவின்…
துருவ் விக்ரம் - அனுபமா ஜோடி… மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் “பைசன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம்…
This website uses cookies.