திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆதரவற்ற 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கி கருவை கலைத்த காவலரை போட்டோ சட்டத்தின் கீழ் கைது மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி லால்குடி நன்னிமங்கலம் காலனி வீடு பள்ளிக்கூட தெரு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் – வெங்கடேஸ்வரி ஆகியோர் இறந்து விட்டனர். இவர்களின் 16 வயது மகள், பெரியம்மாவிடம் வளர்ந்து வருகிறார்.
சிறுமியின் தனிமையை பயன்படுத்தி அப்பகுதியைச் சேர்ந்த போலீஸ்காரர், கலால் துறையில் பணியாற்றும் ஒருவர் என சிலர் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் சில மாதங்கள் சிறுமி திருப்பூரில் பணியாற்றி வந்துள்ளார்.
இதன் காரணமாக அவர் கர்ப்பம் தரித்துள்ளார். இதனை கலைப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த அரசு செவிலியர் சிசிலியானாவிடம் பேரம் பேசப்பட்டது. இதன் அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 4 மாத கரு கலைக்கப்பட்டு உள்ளது.
கருகலைப்பில் சிக்கல் ஏற்படவே மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு செய்வதாக திருப்பூரை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் மீது வழக்கு பதியப்பட்டது.
போலீஸார் விசாரித்ததில் பிரகாஷ் கடந்த சில நாட்களாக தலைமறைவாகி உள்ளது தெரிய வந்தது இது குறித்து பிரகாஷின் மனைவி மற்றும் உறவினர்களை அழைத்து விசாரணை நடத்தி வந்தனர் இந்நிலையில் நேற்று இரவு பிரகாஷ் டிஎஸ்பி அலுவலகத்தில் சரணடைந்தார். உடனடியாக அவரை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்
மேலும் சிறுமியுடன் பாலியல் ரீதியாக தொடர்பு கொண்டு சிறுமியின் கற்பை சூறையாடி வாழ்வை வீணாக்கிய அரசியல்வாதிகளும் அரசு பணியிலும் உள்ள பலர் இன்னும் அந்த கிராமத்திலேயே தலைமறையாக உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இவர்களையும் சமூகத்தில் அடையாளம் காட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
ஏப்ரலில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லி படம் மீது அஜித்குமார் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். சென்னை: மைத்ரி…
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
This website uses cookies.