கரூர் : கரூரில் 16 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி எஸ்.பி நகரில் வசிப்பவர் மணிகண்டன். இவரது 16 வயது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சிறுமியின் தாத்தா பன்னீர் செல்வம் நடத்தி வரும் சலூன் கடையில் 7 மாதமாக பணியாற்றிய ஜெயராமன், சிறுமியிடம் நேரிலும், போனிலும் பேசி வந்துள்ளார்.
அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 11.01.2021 அன்று சிறுமியை வீட்டை விட்டு வெளியில் வரவழைத்து, அவரை கடத்திக் கொண்டு பேருந்தில் ஈரோடு மாவட்டம் பெரிய வலசில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி 15 நாள் குடும்பம் நடத்தியுள்ளனர். அப்போது, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை குறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமியின் தந்தை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கடந்த 24.01.2021 அன்று அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். புகாரினை பெற்றுக் கொண்ட போலீசார் அவர்களை தேடி கண்டு பிடித்து ஜெயராமனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கரூர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தன் மீது போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி ஜெயராமன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார். அந்த மனுவினை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இன்று இவ்வழக்கை விசாரித்த மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு, சிறுமியை கட்டாயப் படுத்தி திருமணத்திற்காக கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்ததுடன், அவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.