ஈரோடு : மைனர் பெண்ணின் கருமுட்டையை விற்பனை செய்த விவகாரத்தில் தாய் உள்பட 3 பேரை சூரம்பட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை பிரபல கருத்தரிப்பு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று கருமுட்டைய பணத்திற்காக விற்பனை செய்வதாக சூரம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் பணத்திற்காக கரு முட்டைகளை விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்த போலீசார், தரகராக செயல்பட்ட மாலதி, மற்றும் சிறுமியின் தாய் சுமையா மற்றும் சுமையாவின் இரண்டாவது கணவர் சையத்அலி ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் கடந்த 4 ஆண்டுகளாக இவர்கள் கருமுட்டை விற்பனையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும் சம்பந்தப்பட்ட சிறுமி பருவமடைந்தது முதல் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று கருமுட்டையை ஒவ்வொரு முறையும் 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.
இதுவரை 15 முதல் 20 முறைவரை கருமுட்டை விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தின் போது சிறுமிக்கு, 20 வயது என போலியான ஆதார் அட்டை தயாரித்து ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள சூரம்பட்டி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.