திண்டுக்கல் அருகே பதினேழு வயது மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட கச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு ஆர்த்தி என்ற 17 வயது மகள் உள்ளார். பள்ளிப்படிப்பை பாதியிலே நிறுத்தி விட்டு வீட்டில் இருந்துள்ளார்.
இவரது தந்தை குப்புசாமி கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதனால், இவரது தாயார் நடத்தை சரி இல்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக வீட்டில் தொடர்ந்து பிரச்சினை இருந்து வந்துள்ளது.
நேற்று இரவு வீட்டில் படுக்கச் சென்ற மாணவி ஆர்த்தி வீட்டில் தூக்கிட்டு இறந்ததாக அவரது தாயார் கூறியதை அடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விட்டனர்.
மேலும், 17 வயது மாணவி எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்..? இறப்பில் எதுவும் மர்மம் உள்ளதா என்பது குறித்து நிலக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்… சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ்…
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
This website uses cookies.