தமிழகம்

17 வயது சிறுமிக்கு குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை : 2 வருடமாக 54 வயது முதியவர் நடத்திய காமலீலை..!

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கி குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை கொன்ற 54 வயது முதியவரின் அந்தரங்க அரங்கேற்றம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே தாய், மற்றும் 17 வயதுடைய மகள் வசித்து வந்துள்ளளனர். அரங்கபாளையம் பகுதியை சேர்ந்த வீராச்சாமி (54) என்பவர் திருமணம் ஆகி முதல் மனைவியை விவாகரத்து பெற்று இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் தாய், மகள் இருவர் வீராசாமி தோட்டத்தில் வேலை பார்த்து வந்தனர். அடிக்கடி 17 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி ஒரு வருடத்திற்கு முன்பு தகாத உறவில் ஈடுபட்டு இரண்டு முறை கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து தாய் மற்றும் மகள் இது குறித்து வெளியில் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளனர்.

மேலும் படிக்க: சென்னையில் போலி வங்கிகள்.. தனி ராஜ்ஜியம் நடத்திய இளைஞர்.. சிக்கும் முக்கியப் புள்ளிகள் : பரபர பின்னணி!!

இந்த நிலையில் மீண்டும் 17 வயதுடைய சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார் இதனை வீட்டில் யாருக்கும் சொல்லாத நிலையில் 7 மாதம் கர்ப்பமாக இருந்ததால் வயிற்று வலியால் துடித்ததாகவும், கருக்கலைப்பாகி குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்ததாகவும், திருமணம் ஆகாமல் குழந்தை பிறந்ததால் அச்சமடைந்து அதனை மறைக்கும் நோக்கத்தில் பெண்ணின் தாயார் தனது வீட்டில் பிறந்த குழந்தையை கட்டைப்பையில் எடுத்துச் சென்று வீட்டிற்கு அருகில் உள்ள அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் குழி தோண்டி புதைத்துள்ளார்.

பின்னர் வயிற்று வலியால் துடித்த 17 வயதுடைய மகளை சின்னதாராபுரம் தனியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது மருத்துவர்கள் இல்லாததால் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கும் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 01.10.24 ஆம் தேதியில் சென்று உள் நோயாளியாக சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

அப்போது மருத்துவர் பரிசோதனை மேற்கொண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் இது குறித்த தகவலை காவல்துறையினருக்கு கொடுத்ததன் அடிப்படையில் சின்ன தாராபுரம் காவல் உதவி ஆய்வாளர் அழகு ராமன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு அமராவதி ஆற்றில் புதைக்கப்பட்ட பெண் குழந்தையை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் 17 வயதுடைய சிறுமையை கட்டாயப்படுத்தி கற்பமாக்கிய அரவக்குறிச்சி ரங்கபாளையத்தைச் சேர்ந்த வீராச்சாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் 17 வயதுடைய சிறுமியை கர்ப்பம் ஆக்கியதும் தெரிய வந்துள்ளது.

பின்னர் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.2 வருடமாக தனது தோட்டத்தில் வேலை பார்த்த குடும்பத்தை காம இச்சைக்கு பயன்படுத்திய காமக் கொடூரனின் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

உதயநிதிக்கு மட்டும் No தடா.. அடித்துச் சொல்லும் இபிஎஸ்!

முடிந்தவரை காவல்துறை, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட்…

10 minutes ago

முரட்டு கம்பேக்கா அமைந்ததா ‘வீர தீர சூரன்’..சூர ஆட்டம் காட்டினாரா விக்ரம்..படத்தின் விமர்சனம்.!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…

37 minutes ago

மோசடியில் செல்வப்பெருந்தகை அண்ணன் மகன்? திமுகவுக்கு தெரியாமலா? அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…

51 minutes ago

நழுவிய செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் ED.. பாஜக செக்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

2 hours ago

யாரும் இத மட்டும் பண்ணிராதீங்க..மனோஜ் இறந்ததற்கு காரணம் வேற..தம்பி ராமையா உருக்கம்.!

தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த…

2 hours ago

கலங்கி நின்ற விவசாயி.. கூண்டோடு வந்த வனத்துறை.. கோவையில் தொடரும் சிறுத்தை அச்சம்!

கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…

2 hours ago

This website uses cookies.