Categories: தமிழகம்

18 சித்தர்கள் தவம் இருந்த பாறைகளில் இருந்து வரும் அதிசய சுனை நீர் : வறட்சி காலத்திலும் வற்றாத அதிசயம்!!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே 4 கிலோ மீட்டர் தொலைவில் அக்கரைப்பட்டி கிராமத்தில் பாறையில் ஆயிரம் ஆண்டு பழமையான அய்யனார் கல்லுப்புலியான் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் ஆடி மாதம் 18 பட்டி கிராம பொதுமக்களும் சேர்ந்து திருவிழாவை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பொங்கல் வைத்தும், ஆடுகளை பலி கொடுத்து வழிபட்டு செல்வார்கள்.

கல்லு புலியான் கோவில் அருகே பெரிய கல்இச்சி மரத்திற்கு அடியில் நீரூற்று பல வருடங்களாக இருந்து வருகிறது. 18 சித்தர்கள் தவம் இருந்த இடம் என்பதால் அந்த இடம் தற்போது சுனையாக உள்ளது என தற்போது உள்ள 7வது தலைமுறை பூசாரி பன்னீர்செல்வம் தெரிவிக்கிறார்.

இந்த நீரூற்று எந்த காலத்திலும் தண்ணீர் இருக்கும், நீர் வற்றியதாக இதுவரை சரித்திரமே கிடையாது. அய்யனார் கல்லுப்புலியான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வருபவர்கள் இந்த நீரூற்றுக்கு சென்று தலையில் தண்ணியை தெளித்துக் கொண்டு பின்னர் சாமி தரிசனம் செய்ய செல்வார்கள்.

மேலும் பொதுமக்கள் வேண்டுதலின் போது பொங்கல் வைக்க இங்கிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் தான் பொங்கல் வைப்பார்கள். இந்த நீரூற்றில் சுத்தமாகவும், சுவையாகவும் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்கும். மேலும் இங்கு தரிசனம் செய்ய வருவார்கள் இந்த நீரை வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது.

அய்யனார் கல்லுபுலியான் கோவிலுக்கு தினமும் காலை 5 மணிக்கு பன்னீர்செல்வம் என்கிற பூசாரி இந்த நீரூற்றிலிருந்து தினமும் நீரை எடுத்துக் கொண்டு அய்யனார் கல்லுபுலியான் கோவிலில் பூஜை செய்வார்.

இதேபோன்று மாலையும் அந்த நீரூற்றிலிருந்து நீரை எடுத்துக் கொண்டு வந்து தான் பூஜை செய்வார் இது தினமும் நடைபெறுவது வழக்கம். கோவிலுக்கு உண்டான சக்தி இந்த நீரூற்றில் தான் இருக்கிறது என்ன கல்லுப்புலியான் கோவில் பூசாரி தெரிவிக்கிறார்.

இதனால் இந்த நீரை புனித நீராக அப்பகுதி மக்கள் கருதி வழிபட்டு வருகின்றனர். நீரூற்றில் நீர் பாறையில் இருந்து வருகிறது என்று கூறுகிறார்கள். எவ்வளவு வறட்சி காலமாக இருந்தாலும் இந்த நீரூற்றில் தண்ணீர் இருந்து கொண்டே தான் இருக்கும்.

மேலும் இங்கு வரும் நீர் எங்கிருந்து வருகின்றது என்று கண்டுபிடிக்க இயலவில்லை. ஊற்று போல மரத்தின் வேர்களில் இடையில் இருந்து நீர் வந்து கொண்டே இருக்கிறது.

நியாயமான விஷயத்திற்கு வேண்டி வரும் பக்தர்கள் நினைத்ததை நடத்திக் கொடுப்பார் இந்த கல்லுபுலியான் சாமி என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

மேலும் சுனையில் கல் இச்சி மரம் இருக்கும் அதே போன்று பாறையில் இருக்கும் கல்லுபுலியான் மேல் பகுதியில் கல் இச்சி மரமும் இருக்கும். மேலும் சுனை நீரூற்று அருகே 2 பனைமரம் உள்ளது அங்கு கருப்புசாமி இருப்பதாக கூறுகிறார்கள். இதனால் இந்த தண்ணீரை தவறாக பயன்படுத்த பலரும் பயப்படுவார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதியம் நேரத்தில் யாரும் இல்லாத பொழுது ஒரு சில மதுபான பிரியர்கள் இந்த நீரை வைத்து மது அருந்தியுள்ளனர். மது அருந்திய பலரை அய்யனார் கல்லுப்புலியான் சாமி தண்டித்தும் உள்ளது.

இதனால் இங்கு சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் தற்போது வரை கல்லு புலியான் சாமி பாதுகாத்து வருகிறார் என அப்பகுதி மக்கள் பக்தி பயத்துடன் தெரிவிக்கின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பஸ் கண்டக்டருடன் உல்லாசம்.. ரகசிய வீடியோ : தப்பான சகவாசத்தால் விபரீதம்!

பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…

22 minutes ago

ரெட்ரோ படத்தில் வடிவேலு? சீக்ரெட்டை போட்டுடைத்த இயக்குனர்? ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்!

புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…

35 minutes ago

UPSC தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை… நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற சிவச்சந்திரன் முதலிடம்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. யுபிஎஸ்சி சர்வீஸ் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பணிகளுக்காக யுபிஎஸ்சி…

47 minutes ago

லோகேஷ் கனகராஜ் எடுத்த திடீர் முடிவு! என்ன சார் கடைசில இப்படி பண்ணிட்டீங்களே?

ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…

1 hour ago

பாஜகவுடன் கூட்டணி வைப்பதும், பாடையில் உட்காருவதும் ஒன்ணுதான் : பரபரப்பை கிளப்பிய திமுக பேச்சாளர்!

பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…

2 hours ago

நண்பனின் தங்கைக்கு மோசமான மெசேஜ்.. வீட்டுக்கே சென்ற அத்துமீற முயன்ற VIRTUAL WARRIORS!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…

3 hours ago

This website uses cookies.