40 வயது காதலனுடன் 19 வயது காதலி வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டு கீரமங்கலம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் மாவட்டம் கீரமங்கலம் மேலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சசிக்குமார்(40). இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசிப் பாளையம் பகுதியில் பணிபுரிந்து வந்துள்ளார்.
அப்போது, அவினாசிப் பாளையம் பகுதியைச் சேர்ந்த கோமதி (19) என்ற இளம்பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதலுக்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்புத் தெரிவிக்கவே, வீட்டை விட்டு வெளியேறிய கோமதி, சசிக்குமாருடன் அவினாசிப் பாளையத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள சசிக்குமார் வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனையடுத்து, கோமதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோமதியைத் தேடி கீரமங்கலம் வரவே, அவர்களால் தங்களுக்கு ஆபத்து ஏற்படுமோ என்று பயந்த காதல் ஜோடி, கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, திருமணக் கோலத்தில் கீரமங்கலம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதனையடுத்து, பெண்ணின் பெற்றோரை காவல் நிலையம் அழைத்த போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் திருமணம் செய்து கொண்ட சசிக்குமாருடன் செல்ல விரும்புவதாக கோமதி கூறியதை அடுத்து, போலீசார் சசிக்குமாருடன் கோமதியை அனுப்பி வைத்தனர்.
40 வயது நபருடன் 19 வயது இளம்பெண் திருமணம் செய்து கொண்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் கீரமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.