கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மஞ்சுநாயக்கனூரை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் மகேந்திரன், ரவி இவர்கள் இருவரும் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துள்ளனர். இவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.
இருவருக்கும் திடீரென வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு என அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளது. இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரும் கள்ளச்சாராயம் குடித்ததாக தகவல்கள் அப்பகுதி முழுவதும் பரவியது.
இதையடுத்து, கோவை போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், கள்ளச்சாராயம் குடித்ததாக பரவிய தகவல் வதந்தியை என்பது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து, முதல் கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் அருந்தியது கள்ளச்சாராயம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது என மேற்கு மண்டல ஐஜி பவனிஸ்வரி தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.