திருவள்ளூர் மாவட்டம்,கவரப்பேட்டை அருகே உள்ள பெருவாயல் கிராமத்தில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இருவர் மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டச் சேர்ந்த ஆனிமோல், திருவண்ணாமலை மாவட்டம் குமாரங்குடி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தணிக்கை அலுவலர்களாக பணி செய்து வருகின்றனர்.
இன்று தன்னுடன் பணி செய்யும் நண்பர்களுடன் இருசக்கர வாகனங்களில் ஆந்திர மாநிலத்தில் உள்ள வரதப்பாளையம் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா செல்ல பெருவாயல் அருகே இருசக்கர வாகனங்களில் சென்றுள்ளனர்.
பெருவாயல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஈச்சர் லாரியில் பின்பக்கமாக மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர்.
அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்துள்ள நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து கவரப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெருவாயல் பகுதி வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.