Categories: தமிழகம்

கருவறை- கல்லறை… 2 நாட்களே ஆன சிசு கல்லறையில் இருந்து உயிருடன் மீட்பு : வீசி சென்றது யார்? போலீசார் விசாரணை

கல்லறை தோட்டத்தில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கையில் மருது சகோதரர்கள் குருபூஜை மற்றும் பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருப்புவனம் போலீசார் மானாமதுரை பை-பாஸ் சாலை அருகில் உள்ள ரெயில்வே மேம்பாலம் பகுதியில் இன்று காலை ரோந்து சென்றனர்.

அப்போது அங்குள்ள கல்லறை தோட்டம் பகுதியை ஒட்டியுள்ள மழைநீர் கால்வாய் சிமெண்ட் சிலாப்பு பகுதியில் இருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. அங்கு வேறு யாரும் இல்லாத நிலையில் எங்கிருந்து அழுகுரல் வருகிறது என்று போலீசார் தேடினர்.

அப்போது மழைநீர் கால்வாயில் தண்ணீர் இல்லாத பகுதியில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று அனாதையாக கிடந்தது.
அதனை போலீசார் மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்த குழந்தைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் போலீசார் மழைநீர் கால்வாயில் பச்சிளம் குழந்தையை வீசிவிட்டு சென்றது யார்? தாயே அந்த குழந்தையை அங்கு போட்டு விட்டு சென்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லறை தோட்டம் பகுதியில் கால்வாயில் பச்சிளம் பெண் குழந்தையை போட்டு சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வெறுப்பேற்ற கள்ளக்காதல் நாடகம்.. கணவரின் உயிரைப் பறிந்த CRPF வீரர்!

அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…

29 minutes ago

சுற்றி வளைக்கும் பாஜக.. திக்குமுக்காடும் திமுக.. பட்ஜெட் மீது கடும் தாக்கு!

டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…

1 hour ago

முதலில் ஒருவர் அறிக்கை விடுகிறார்.. அடுத்து ED சொல்கிறது.. செந்தில் பாலாஜி அட்டாக் பேச்சு!

ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…

2 hours ago

நடிகை சினேகாவுக்கு அரிய வகை நோய்.. தைரியத்தை பாராட்டும் பிரசன்னா!

நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…

3 hours ago

பில்டப் காட்டி சீன் போட்ட நயன்தாரா.. பதிலடி கொடுத்த 90களின் கனவுக்கன்னி!

நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…

3 hours ago

கத்தியை காட்டி மிரட்டி 19 வயது மகளுக்கு செக்ஸ் டார்ச்சர்.. தந்தையின் சபல புத்தி..!!

ஓட்டப்பிடாரம் பகுதியில் மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தையை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதையும் படியுங்க…

4 hours ago

This website uses cookies.