+2 படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் : கோவையில் அதிர்ச்சி சம்பவம்!
கோவையில் மருந்து கடை வைத்திருந்த நபர் போலி மருத்துவராக செயல்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை நீலிக்கோனம்பாளையம் பகுதியில் போலி மருத்துவர் ஒருவர் மருத்துவம் பார்த்து வருவதாக மருத்துவ மற்றும் ஊரக நலம் பணிகள் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் போலீசாருடன் அங்கு சென்ற அரசு அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர்.அப்போது போலியாக மருத்துவர்,மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து மருந்து கடை மற்றும் கிளினிக்-யை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்ததை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் போலி மருத்துவரின் பெயர் தேவராஜ் என்பதும் இவர் 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பதும் அப்பகுதியில் மருந்து கடை வைத்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலி மருத்துவர் தேவராஜை சிங்காநல்லூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
This website uses cookies.