+2 படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் : கோவையில் அதிர்ச்சி சம்பவம்!
கோவையில் மருந்து கடை வைத்திருந்த நபர் போலி மருத்துவராக செயல்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை நீலிக்கோனம்பாளையம் பகுதியில் போலி மருத்துவர் ஒருவர் மருத்துவம் பார்த்து வருவதாக மருத்துவ மற்றும் ஊரக நலம் பணிகள் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் போலீசாருடன் அங்கு சென்ற அரசு அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர்.அப்போது போலியாக மருத்துவர்,மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து மருந்து கடை மற்றும் கிளினிக்-யை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்ததை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் போலி மருத்துவரின் பெயர் தேவராஜ் என்பதும் இவர் 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பதும் அப்பகுதியில் மருந்து கடை வைத்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலி மருத்துவர் தேவராஜை சிங்காநல்லூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.