திருவண்ணாமலையில் கழிப்பறை வசதி இல்லாததால் இரு பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போளூர் அடுத்த பெரியகரம் அருகே உள்ள காந்திநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் காவ்யா. இவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக இன்று காலை வயல்வெளிக்கு சென்றுள்ளார். அவர் செல்வதை கவனித்த அவரது மகள் பவ்ய ஸ்ரீ மற்றும் அவரது அண்ணன் மகள் சிந்து பாரதி என்பவரும் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக, அங்கிருந்த கிணற்றில் இருவருத் தவறி விழுந்துள்ளனர். நீரில் மூழ்கிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காகத் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், அப்பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் கழிவறைகள் உடனடியாக ஏற்படுத்தித் தரப்படும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கழிப்பறை வசதி இல்லாததால் இரு பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
This website uses cookies.