திருப்பூர் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில், கல்லூரி மாணவர் உயிரிழந்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் நவீன்குமார்( 19 ). திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் நேற்று இரவு 7 மணி அளவில் ஊத்துக்குளியில் இருந்து படியூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது இரட்டைக்கிணறு பகுதி அருகே டீ கடையில் நின்று கொண்டிருந்த ரமேஷ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை எடுத்து எதிர் திசையில் இயக்கியுள்ளார்.
அப்போது, எதிரே வந்த நவீன்குமார், ரமேஷ் ஆகியோரின் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில், நவீன் குமார் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவர் உயிரிழந்தார்.
இது குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.